கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 7
செங்கோடுவேரி: செங்கோடுவேரியைச் சிறுசெடி என்கிறார் இரா. பஞ்சவர்ணம் (கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், ப. 82). சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டு தவிர மற்ற சங்கப் பாடல்களில் இத்தாவரம்பற்றிய குறிப்பு காணப்படவில்லை. ஆனால், கோவை இளஞ்சேரன் இதனை ஒரு மரம் என்கிறார். செம்மைநிறப் பூ உடையது. கொங்குவேளிரும் (பெருங்கதை) இதனை முல்லைநிலத்து ஆற்றங்கரை மரமெனக் கருதுகிறார். (கு. வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், ப.100). தேமாம்பூ தேமாம்பூ, ஆம்பிரம், மாம்பூ என அழைக்கப்படும். முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது; முதலில் புளிப்பாகவும், […]