கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 17

நெய்தல்மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது. 1. நீள்நறு நெய்தல் – நீண்ட வாசனையுடைய நெய்தற்பூ. இதன் காம்பு நீண்டது. இது சுனைகளிலும், குளங்களிலும் பூக்கும் (வரி 79). 2. மணிக்குலைக் கள் கமழ் நெய்தல் – இது குறுகிய காம்பினை உடையது. இது வயல்களில் பூக்கும் (வரி 84). கருநீலமுடைய நெய்தல் பெரும்பான்மையும் கழிகளிலேயே காணப்படும். ஆனால், கழனி, கயங்கள் […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 16

தமிழகத்தில் தொன்றுதொட்டு பயிரிடப்பட்டுவரும், தமிழச் சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்துவிட்ட, நெல், கரும்போடு முதலிடம் வகிக்கும், முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும் தாவரமாகும் வாழை. இதன் அனைத்து உறுப்புகளும் பயன்படக் கூடியவை. வாழையைக் கிழங்குமூலம் பயிரிடுவார்கள். இதன் பல இனங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. வாழை அறிவியல் வகைப்பாட்டில் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். இது இலத்தீன் மொழியில் மூசா (Musa) எனப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன்முதலாக பப்புவா நியூகினியில் பயிரிடப்பட்டது. இன்று அனைத்து வெப்பவலயப் பகுதிகளிலும் […]

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 15

இது ஒரு சிறு செடியில் பூக்கும் பூ. குல்லையின் இலை பொருந்திய நுனியையும், தளிரையும் சங்க கால மகளிர் அணிந்தனர் என்பதைத் திருமுருகாற்றுப்படை (வரிகள் 201-202) வாயிலாக அறிகிறோம். ஆநிரைகளை உடைய பொதுவர், கல்லிடத்தும், காட்டிடத்தும் மலர்ந்த கொன்றை, காயா, முல்லை, வெட்சி, குருந்து, கோடல், பாங்கர் மற்றும் குல்லை முதலிய மலர்களாலாய கண்ணியைச் சூடியவராக வந்ததைக் கலித்தொகை (103:1-4). மேலும், சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை ஆகிய இலக்கியங்களிலும் இப்பூவைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.                 கஞ்சங்குல்லையைத் தலைமாலையாக வடுகர் அணிந்ததை, ‘குல்லைக் […]

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 14

பாலைமரம் சங்ககாலத்தில் மழையற்ற வறட்சியான பாலைநிலத்துக்கு உரியதாக, “பாலை நின்ற பாலை நெடுவழி” (சிறுபாணாற்றுப்படை, வரி 11)என்று கூறப்பட்டிருக்கின்றது. இதைப்பற்றி நற்றிணையில் ஒரு விளக்கம் காணப்படுகிறது. “உள்ளுதொறு நகுவேன் தோழி வள்ளுகிர்ப்             பிடிபிளந் திட்ட நாரில்வெண் கோட்டுக்             கொடிறுபோல் காய வாலிணர்ப் பாலைச்             செல்வளி தூக்கலின்இலைதீர் நெற்றம்             கல்இழிஅருவியின்ஒல்லென ஒலிக்கும்” — (நற்றிணை 1-5) பாலையின் நாரைப் பிளப்பதால் ‘வெண்கோட்டுடன்’ பாலைமரம் தோன்றுகின்றது என்று கூறப்படுவதை நோக்கவேண்டும். இதன் அடிமரம் மிகவெண்மையாகக் காணப்படும். இதனால் இந்த மரத்தைத் ‘தந்தப் பாலை’ என்றும், ஆங்கிலத்தில் ‘Ivory […]

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 13

கரந்தை கொடிவடிவில் காணப்படும். இதனை நாறு கரந்தை என்று குறிஞ்சிப்பாட்டு உரையும், கரந்தை மாக்கொடி என்று பதிற்றுப்பத்தும் (பதிற்றுப்பத்து, 40:5, குறிஞ்சிப்பாட்டு, 76 உரை) குறிப்பிடுகின்றன. கரந்தைப் பூவின் நிறம் சிவப்பு. இது மணம் உடையது.  செம்பூங்கரந்தை என்று அகப்பாடல் (269 : 11) கூறுகின்றது.  பெண் கன்றின் முலை எழுந்து காட்டாது, பரந்து  காட்டுவது போலக் கரந்தைப் பூவும் செடியினின்று எழுந்து நில்லாது அதனோடு படிந்து விரிந்துகாட்டும். இதனை, நாகு முலை அன்ன நறும் பூங்கரந்தை என்ற புறப்பாட்டால் (261 : 13) உணரலாம். சங்க இலக்கியத்தில் […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 12

ஒரு வகை கோரை இனத்தைச் சார்ந்தது. இதனை, ‘வாட்கோரை’, ‘நெட்டிக்கோரை’ என்று நச்சினார்க்கினியரும்,.  ‘பஞ்சாய்க்கோரை’, ‘தண்டாங்கோரை’ என உ.வே.சா.வும் வழங்குவர். மணம் வீசும் செருந்திமலர்கள் பொன்னிற வண்ணத்துடன் காட்சியளிக்கும். இப்பூவை நெய்தலுடன் சேர்த்துக்கட்டி மாலையாக அணிந்துகொள்வர். “நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக் கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்” –ஐங்குறுநூற்றுப் பாடல் (182 : 1-2). கண்டார் பொன் என்று மருளச் தோன்றும் செருந்தி என்பதை, “தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்” என்று சிறுபாணாற்றுப்படையும் (வரி 147), வண்டுகள் மொய்த்தலால் விரிந்த செருந்தி என்பதை,“வண்டுபட விரிந்த செருந்தி” என்ற அகப்பாடலும் […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 11

போங்கம் போங்கம் உயர்ந்த மரமாகும். குறிஞ்சி நிலத்தது. நச்சினார்க்கினியர் இதனையும்,  திலகத்தையும் மஞ்சாடி என்கிறார்.  போங்கம், குனி, குன்னி, மலமஞ்சடை, கல்மாணிக்கம் எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் மரம் இது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்குப் பகுதிகளின் பசுமைமாறாக் காடுகளில் (கடல் மட்டத்திலிருந்து 800 – 1200 மீட்டர் உயரமான மலைகளில்) தெற்கு சயாத்திரி மலைகளிலும் மற்றும் அரிதாக கூர்க் பகுதிகளிலும் காணப்படுகின்றன. மரங்கள் 30 மீட்டர் உயரம்வரை வளரக் கூடியவை. மரத்தின் பட்டை மாநிறமானது, வழுவழுப்பானது. சிறிய […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 10

குறுநறுங்கண்ணி, குண்டுமணி, குன்றிப்பூ ,குன்றி உள்ளிட்ட பெயர்களால் அறியப்படும் கொடி. இதனைக் குன்றிப்பூ என நச்சினார்க்கினியர் உரைகூறுவார். கருஞ்சிவப்பு நிறத்தில் கருமைநிறத்தில் ஒரு மறுவைக்கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இச்சொல் குன்றிமணி என்பதன் திரிபாகும்.       சிலபகுதிகளில் இம்மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மரபுவழி நகைத்தொழில்செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணியைப் பயன்படுத்துவதுண்டு. சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.       இது தமிழ்நாட்டில் எங்கும் மலரக்கூடியது. […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 9

காயாம்பூ காய்ப்பது இல்லை. எனவே இதனைக் ‘காயா’ என்றனர்.  திருமாலைக் ‘காயாம்பூ மேனியன்’ என்பர். மைநிறம்கொண்ட இத்தெய்வத்தைத் தொல்காப்பியம் ‘மாயோன்’ எனக் குறிப்பிடுகிறது. மாயோனைத் தெய்வமாகக்கொண்ட முல்லை நிலத்துக் கருப் பொருள்களில் ஒன்று காயாமலர். காட்டுப் பகுதிகளிலும், செந்நிலப் பகுதிகளிலும் இது வளர்ந்திருக்கும். முதுவேனிற் காலத்தில் பொலிவிழந்திருந்த மரத்தின் கிளைகள், மழை பெய்தவுடன் தழைத்துக் கருமையுடன் பளபளப்பாகத் தோற்றமளிக்கும். காயா இணராக மலரும் தன்மையைப் ‘பல் இணர்க் காயா’ (குறிஞ்சிப்பாட்டு, வரி 70) எனக் கபிலர் பாடுகிறார். சின்னச்சின்ன ஊதாமலர்களை அடுக்கியதுபோல பூங்கொத்துகளுடன் காயாமரக் கிளைகள் தோற்றமளிக்கும். இலக்கியங்களில் காயாமலர்        […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 8

குடசம் குடசம், குடப்பாலை என அழைக்கப்படும் மரமாகும்.  இதனை ‘வெள்ளிய பூவினையுடைய வெட்பாலைப் பூ’ எனக் குறிஞ்சிப்பாட்டு கூறுகிறது. இலக்கியங்களில் குடசம்       மகளிர் மலர்ப்படுக்கை மேலிருந்தபோது, செம்பட்டாடையை அரையில் உடுத்து, தலையில் முடிந்த கூந்தலில் செங்கூதாளப்பூ, குறிஞ்சிப்பூவுடன் வெட்பாலைப் பூவையும் (குடசம்) சூடினர் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இச் செய்தியை, “குரல்தலைக் கூந்தல் குடசம் பொருந்தி” (14. ஊர்காண் காதை, வரி 87) என்ற பாடல்வரி உணர்த்துகிறது. மேலும் வைகை ஆற்றங்கரையில் பூத்திருந்த பல்வேறு மலர்களைக் குறிப்பிடும்போது, அம்மலர்களில் ஒன்றாக குடசம் […]