மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 4

பெயர்கள் : சுப்பையா, சந்நியாசி, சங்கிலி முதலிய பழைய பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. நம்பி, வெள்ளி வீதி, நக்கீரன், மங்கையற்கரசி, மணிமேகலை, கண்ணகி, மாதவி, சிவகாமி, மீனாட்சி போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளன. சில பெயர்களை மாற்றி அழைக்கின்றனர். முத்தையா-மூச்சியா, முருகன்-மூர்கன், வீரப்பன்-வீர்லப்பென், திருவேங்கடம்-திருவேங்கடும் என நல்ல தமிழ் பெயர்களும் பிரஞ்சு தொடர்பினால் திரிந்து வழங்குவதைக் காணலாம். பழக்கவழக்கங்கள் : குழந்தை பிறந்தால் 30 நாள் வரை அந்த வீட்டிற்குச் சென்று வந்தால் தலை முழுகுகின்றனர். […]

மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 3

தமிழரின் இன்றைய நிலைசமயம் :தமிழர்கள் மொழியை மறந்து விட்டாலும் இன்றும் தங்களைத் தமிழர்கள் என்று உணர்வது சமயத்தால்தான். மொரீசியஸ் முழுவதும் சுமார் 125 கோயில்கள் இருக்கின்றன. முருகன், சிவன், விநாயகர், மாரியம்மன், கிருஷ்ணன், துர்க்கை, இராமன், வீரமாகாளி அம்மன்,  முனீஸ்வரர், மதுரை வீரன், கன்னியாகுமரி முதலிய தெய்வங்களுக்கு உருவங்கள் உண்டு. தலைநகரிலுள்ள சொக்கலிங்கம் – மீனாட்சியம்மன் கோயில் பெரியது. தைப்பூசத்தில் காவடி எடுப்பது உண்டு. தைபூசமே மிகப்பெரிய திருவிழாவாகும். இந்நாள் பொது விடுமுறை ஆகும். கொடியேற்றம் தொடங்கி, […]

மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 2

1. முதலாவது கட்டம் : 1728-ஆம் ஆண்டு பெநுவா தூய்மா என்பவர் மொரீசியசின் ஆளுனராகப் பதவியேற்றார். இவர் முன்பே புதுச்சேரியில், பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியில் அலுவலராக இருந்தார். இவரால், முதன் முதலாக 275 தமிழர்கள் மொரீசியசில் குடியேற்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுள் 108 பேர் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்ட இளைஞர்கள். 95 பேர் கைவினைத் திறம் பெற்ற தொழிலாளர்கள். இவ்வரலாற்றுக் குறிப்பின்படி ஆப்ரிக்க அடிமைகளுக்குப் பின்னர் மொரீசியசுக்கு வந்த முதலாவது பிற இனத்தவர் தமிழர்களேயாவர். 1735-ஆம் ஆண்டு […]

புதுச்சேரியில் முதுமக்கள் தாழி !

புதுச்சேரியின் அரிக்கமேடு என்னும் பகுதி வரலாற்று முதன்மை வாய்ந்த பகுதியாகும். புதுவையின் எழிலார்ந்த கடற்கரை ஒட்டி அமைந்துள்ள அரிக்கமேடு பற்றி முன்பே எழுதியுள்ளேன். என் பிறந்த ஊருக்குப் போகும்பொழுதெல்லாம் அரியாங்குப்பம் ஆற்றைக் கடக்கும் பொழுதெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் பார்ப்பது என் வழக்கம். நேற்று (31.01.2010) என் பிறந்த ஊர் சென்று பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்பொழுது இரவு 9 மணியளவில் அரியாங்குப்பம் பகுதியில் கடையில் தொங்கிய ஒரு செய்தித்தாளில் அரியாங்குப்பத்தில் தங்கப் புதையலா ? என்று ஒரு […]

தென்னிந்தியாவிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த புதைபொருள் !

உடல் எரிக்கப்பட்டு எலும்பும் சாம்பலும் வைக்கப்பட்டிருந்த ஏழு பண்டைய தாழிகள் புதுச்சேரி அரிக்கமேடு கிராமத்துக்கு அருகே கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு பெரிய முதுமக்கள் தாழி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரிக்கமேடு தொல்பொருள் ஆய்வு களத்திற்கு அருகில் மணவெளி என்ற இடத்தில் தனியார் ஒருவரின் நிலத்தில் கட்டடம் கட்ட அடித்தளம் தோண்டியபோது இவை கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு. 3 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று தாகூர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறுகிறார். 1989 ஆம் […]

புதுச்சேரி அகழாய்வில் இரண்டு தாழிகள், ஓர் ஈமப்பேழை கண்டெடுப்பு

தாழியின் தோற்றம் புதுச்சேரி அரியங்குப்பம் அடுத்த மணவெளிப் பகுதியில் கடந்த ஞாயிறு(31.01.2010) வீட்டுக்குக் கடைக்கால் தோண்டியபொழுது முதுமக்கள் தாழி கிடைத்தது.இதனால் வீடு கட்டும் பணி நிறுத்தப்பட்டு, தொல்பொருள் ஆய்வுத்துறை அறிஞர்களின் அகழாய்வுப் பணிக்குக் காத்திருந்தனர். தொல்பொருள் ஆய்வுத்துறை சார்ந்த அறிஞர்களும் புதுவைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் மணவெளிப் பகுதியில் கிடைத்துள்ள அகழாய்வுப் பொருள்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு புதைபொருளாகக் கிடைத்துள்ள தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்று அறிவித்தனர்.இக்கால கட்டத்தில் அருகில் உள்ள […]

புதுச்சேரி முதுமக்கள் தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு சார்ந்தவை

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில் வீடு கட்டுவதற்குத் தோண்டும்போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் கி.மு. 3 அல்லது 4-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கூறுகின்றனர்.எனவே தமிழக வரலாற்றின் தொன்மையை அறிவதற்கு இந்தச் சான்றுகள் பேருதவிபுரியும்.சென்னைத் தொல்பொருள் துறையின் துணை கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ரமேஷ் முளிமணி தலைமையில் ஒரு குழுவினர் இப் பகுதியை நேற்று ஆய்வு செய்தனர். அவர் கூறுகையில், இப்போது கிடைத்துள்ள ஒரு முதுமக்கள் தாழி காவல் […]

11th Century inscription found near Thanjavur

THANJAVUR:  An 11th century inscription of Raja Raja I period was recently found in a village near Thanjavur. The piece of stone with inscriptions was found in the backyard of AS Mohan of Arulmozhipettai. This region, known earlier as Arunmozhidevanpettai, got the name of Raja Raja I (985-1014). Mani Maran, a scholar from Saraswathi Mahal […]

சென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்

சென்னையின் வரலாற்றை தாமல் வெங்கடப்ப நாயகர், 1639ல் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியான பிரான்சிஸ் டே-வுக்கு (Francis Day) வணிகதளம் அமைக்க ஒப்பந்தம் எழுதிக்கொடுத்த நாளில் இருந்து கணக்கிடுகிறார்கள். ஆங்கிலேயர் வணிகதளம் அமைக்க இடம் தேடிய காலகட்டத்தில் பழவேற்காட்டுக்கு தெற்கே இருந்த கடற்கரைப் பட்டினங்களை ஆட்சி செய்து வந்தவர்கள் வன்னியர்களான தாமல் சகோதரர்கள் எனும் வேங்கடப்ப நாயகரும் அவர் தம்பியும், பூந்தமல்லி பகுதியின் ஆட்சியாளரான, ஐயப்பன் நாயகரும்தான். சென்னையின் வரலாற்றை பதினேழாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குவதை விட, தொண்டை […]