புறநானூற்றில் ஆட்சியியல்

புறநானூற்றில் ஆட்சியியல் முனைவர் கு. கணேசன், சாகித்திய அகாதெமி எழுத்தாளர், சேலம் உலகில் ஒப்பற்ற தாய்மொழியாம் தமிழ் மொழியை முத்தமிழ், பைந்தமிழ், செந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் எனச் சிறப்பித்து தொன்றுதொட்டு அழைப்பர், தமிழர். தமிழ் மக்களின் வாழ்வியலை வகுத்துக்காட்டும் கருவூலமாக தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களே சங்க இலக்கியங்கள். சங்க நூல்கள் மூன்று காலங்களையும் முகிழ்க்கும் பெட்டகம். அவை தமிழர்தம் பண்பாட்டுக் கூறுகளை வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கியவை. இது வாழ்வியலுக்கு இலக்கணம் கண்ட நூலாகும். சங்க காலத்தின் குறைபாடுகளைக் களைந்து வெளிக் கொணர்ந்தவை திருக்குறள். அன்றைய காலத்தின் […]

புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்

புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்      முனைவர் அ.சு.இளங்கோவன் ஒட்டன்சத்திரம்.                            தமிழர் வாழ்வியலை அகம் புறம் என்னும் இருபெரும் பிரிவுகளாகக் கண்டனர். இது அறம் பொருள் இன்பம் வீடு என்னும் பகுப்புக்கும் முன்னதாகும். அகம், அன்பின் சிறப்புக்களைப் பாடித் தனிமனிதர்களிடையே காதல் வாழ்வையும் குடும்ப வாழ்வையும் நெறிப்படுத்தியது. புறம், பொதுவாழ்வையும் மனிதன் உயர்நிலை எய்தும் சிறப்பையும் பாடியது. புறநானூறு தமிழர் பண்பாட்டின் களஞ்சியம். கி.பி. 1600 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பொற்காலம். ஆங்கில வாழ்வியலும் இலக்கியமும் உச்சி எய்தி உலகை வளைக்க வாய்ப்பளித்தன. ஆனால் […]

பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்

{தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் முனைவர் வீ. செல்வகுமார் தமிழகமெங்கிலும் விரிவான பல தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் முன்னணி ஆய்வாளர். தமிழ்ப்பல்கலை வளாகத்திலேயே கற்காலக் கருவிகளைக் கண்டறிந்தவர். கேரளத்தின் கடற்கரையில் அமைந்துள்ள பட்டிணம்தான் பண்டைய சங்க காலத் துறைமுகமான முசிரி என்பதை நிறுவிய ஆய்வுக் குழுவில் இவரும் ஒருவர். நமது வேண்டுகோளை ஏற்று வரலாறு டாட் காம் நூறாவது இதழுக்காக தனது பட்டிணம் ஆய்வின் ஒட்டுமொத்தப் பிழிவையும் ஒரே கட்டுரையில் அளித்திருக்கும் […]

அழகன்குளம் அகழாய்வு – வே.இராஜகுரு

கிறிஸ்து பிறப்பதற்க்கு முன்பே தமிழ்நாட்டின் சில துறைமுகங்கள் எகிப்து, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா, மியான்மர், போன்ற நாடுகளுடன் கடல் வாணிகம் செய்து கொண்டிருந்தது என்பதற்கு பல தொல்பொருள் ஆதாரங்கள் உள்ளன. மிக நீண்டதொரு கடற்கரையைக் கொண்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்திலும் அத்தகைய சில துறைமுகங்கள் இருந்துள்ளன.  இராமநாதபுரத்தின் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் வைகை கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது  அழகன்குளம் எனும் ஊர். இங்கு  செய்யப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூர் சங்ககாலத்தில் மிக முக்கியமான துறைமுக நகராக இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.  தமிழ்நாடு அரசு தொல்பொருள் […]

திருக்குறளும் அரிய தகவல்களும்

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812  * திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்  * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133  * திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380  * திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700  * திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250  * திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330  * திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000  * திருக்குறளில் […]

இடக்க நாட்டு பொண்ணு வடக்க போனா வாழாது!

இன்று பேராசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது எங்கள் பேச்சு மரக்கானம் என்ற ஊர் பற்றி நீண்டது. மரக்கானத்தை அடுத்து இடைக்கழிநாடு என்ற ஊர் உள்ளது பற்றி நான் நினைவுகூர்ந்தேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தி வளமுடன் இருந்த அந்த ஊர் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் இலக்கியங்கள் கூறும் பகுதியை எடுத்து விளக்கினேன். இன்று அந்த ஊரின் நிலை பற்றி உரையாடிக்கொண்டிருந்தபொழுது பேராசிரியர் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த அந்தப் பேராசிரியருக்கு இடைக்கழிநாட்டில் திருமணத்திற்குப் பெண் […]

வரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை…

12.01.2008 காலை புதுச்சேரியில் புறப்பட்டு சென்னை நோக்கி மகிழ்வுந்தில் செல்லும் வாய்ப்பு அமைந்தது. கிழக்குக்கடற்கரைச்சாலை வழியில் எங்கள் பயணம் அமைந்தது. நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த கடப்பாக்கம், அருகில் உள்ள ஆலம்பரைக்கோட்டையைப் பார்க்க நினைத்தோம். கடப்பாக்கம் பகுதி சங்க காலத்தில் இடைக்கழிநாடு எனப்பட்டது. இன்றும் அப்பகுதியில் இடைக்கழிநாடு என்ற பெயரில் ஊர் உள்ளது. சிறுபாணாற்றுப்படையைப் பாடிய புலவர் பெருமகனார் நத்தத்தனார் பிறந்த நல்லூர், இங்குதான் உள்ளது. புதுச்சேரி – சென்னைக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள கடப்பாக்கத்திலிருந்து பிரிந்து […]

சங்க கால சோழநாட்டு ஊர்கள்

சங்க காலத்தமிழகம் அரசியலால் சேர, சோழ, பாண்டிய என மூவேந்தர்களின் பெருநாடுகளாகவும், சிறு குறுநிலங்களாகவும், பிளவுண்டு கிடந்தது. ஆனால் மொழியாலும், பண்பாட்டாலும் தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தனர். இந்த மூன்று பெருநாடுகளிலும் வாழ்ந்த புலவர்கள், மூவேந்தர்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்ததைச் சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. சங்க இலக்கியம் பாடியவர்களில் பெயர் தெரிந்த புலவர்களாக 473 பேர் காணப்படுகின்றனர். இவர்களுடன் சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாட்டைச் சேர்ந்த புலவர்களும், புலவர்களுக்கு உரிய நாடு மற்றும் பெயர் தெரியாத புலவர்களும் […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 22

கொன்றை கொன்றைப்பூக்கள் மிகமிக அழகானவை. சரம் சரமாக ஒள்ளிய மஞ்சள் நிறத்தில் மாலைகள் தொங்கினாற் போன்று பூத்துக் குலுங்கிக் கண்களைக் கவர்ந்தீர்க்கும். கொன்றைமரம் பூத்துக் குலுங்கும்போதும், மரமெல்லாம் கொழுந்துகளாக அரும்பியிருக்கும் காலத்திலும் பார்ப்பதற்கு மிகக் கவர்ச்சியாக இருக்கும். இக்காலத்தில் காணப்படும் கொன்றையில் இரண்டு மூன்று இனங்களில் மஞ்சள் பூவுடையதே சங்கப் பாடல்களில் கூறப்பட்ட கொன்றையாகும். பிற கொன்றைகள் வெளிநாட்டிலிருந்து கொணரப்பட்டு இங்கு வளர்வன. கொன்றை தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப்படும் சிறு மர வகையைச் சேர்ந்தது. இதன் […]

சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்

சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்! புத்தர் சிலைகளைத் தேடத் தொடங்கியபோது தெரிய வில்லை, அந்த ஆய்வு இந்த அளவுக்கு என் வாழ்க்கையை அர்த்தபூர்வமாக்கும் என்பது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நீளும் ஒரு பயணம்! வயற்காடுகள், ஆற்றங்கரைகள், இன்றைய நவீனத்தின் வெளிச்சம் அவ்வளவாகப் படாத கிராமங்கள் என்று சோழநாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பயணித்திருக்கிறேன். அந்தப் பயணத்தின் விளைவாகக் கண்டுபிடித்தவைதான் 65 புத்தர் சிலைகள்.எதிர்கொண்ட இனிய அனுபவங்கள் மட்டுமல்ல, எத்தனையோ தோல்விகளும் ஏமாற்றங்களும் […]