TAMIL LANGUAGE & LITERATURE – Tholthamizh – Ma. So. Victor

தமிழ் மொழியை ஆய்வு செய்வோர், அதற்கான தரவுகளை பல்வேறு தளங்களிலும் தேடவேண்டியுள்ளது. திராவிட மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் தமிழ் விளங்குகின்றது என்ற கொள்கை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.கி.பி பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகம் வந்த ஐரோப்பியர்கள்தாம், தமிழைக் கற்று தமிழின் சிறப்பைத் தமிழருக்கே உணர்த்தினர். தமிழர்கள், உலகின் மேற்குத் திசையை நோக்க, ஐரோப்பியர்களே, அவ்வாயிலைத் திறந்து விட்டனர். அதுவரையில் தமிழ் மொழியை மட்டுமே அறிந்திருந்த தமிழர், மேலை மொழிகளையும் கற்கத் தொடங்கினர். வீரமாமுனிவர், கால்டுவெல் கங்காணியார், […]

16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு!

சேலம் இரும்பாலை அருகே போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கான வீரக்கல் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெருமாள் ஆசிரியர், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், கவிஞர் மன்னன், வீரமணி ஆகியோர் அடங்கிய குழு சேலம் இரும்பாலைக்கு அருகே உள்ள திருமலைகிரி ஊராட்சி வேடுகாத்தான்பட்டி கிராமத்தில் 8/07/2018 ஞாயிற்று கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள தாமரை ஏரியின் கிழக்கு பகுதியில் சாலையின் அருகே ஒரு வீரக்கல் கண்டறியப்பட்டு […]

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 24

சிந்துவாரம் கருநொச்சிப்பூ என நச்சினார்க்கினியர் அழைக்கும் இத்தாவரம் பற்றிய செய்தி குறிஞ்சிப்பாட்டு தவிர வேறு சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. “நந்தி வட்டமும் நாகத்து அலரும் சிந்துவாரமுஞ் சேபாலிகையும்” என்று பெருங்கதையில் (2, இலாவண காண்டம், 15, விரிசிகை மாலைசூட்டு : 103-104) இத்தாவரம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தும்பை தும்பையானது, தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, பேய்தும்பை, கழுதைத்தும்பை, கசப்புத்தும்பை, கவிழ்தும்பை, மஞ்சள் தும்பை என பலவகைப்படும். வறண்ட நிலங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 23

பகன்றை மருத நிலத்திற்குரிய இக்கொடியைச் ‘சிவதை’ என்று நச்சினார்க்கினியரும்,.  பெருங்கையால் என்று அடியார்க்குநல்லாரும் (சிலப்பதிகாரம், 13 : 155-160 உரை) கூறுவர்.  இக்கொடி அகன்ற இலைகளைக் கொண்டது. தேன் மிகுதியாக உடைய, பனிக்காலத்தில் மலரும் பகன்றை மலர் வெண்மையான இதழ்களையும், பகலில் தோன்றும் திங்கள் போலும் உருவத்தினையும் கொண்டது. இதன் மணம் கள்ளின் மணம் போன்றிருத்தலால், இதனை இல்லத்தார் விரும்பிச் சூடுவதில்லை; முறுக்கிய ஆடையை ஒத்து விளங்கும். பகன்றை மலர் வயலிலும், சேற்றிலும், பசுமையான புதரிலும் மலரும் என இலக்கியங்கள் கூறுகின்றன (ஐங்குறுநூறு, […]

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 21

தணக்கம் இதைக் கபிலர், ‘பல்பூந் தணக்கம்’ (பல பூக்களையுடைய தணக்கம்) எனக் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டு தவிர, வேறு இலக்கியங்களில் தணக்கம்பற்றிய செய்தி காணப்படவில்லை. பெருங்கதையில்,  “தண்பூந் தணக்கந் தமாலந் தகரம்” (பெருங்கதை, இலாவண காண்டம், 15 விரிசிகை மாலைசூட்டு : 15)  தணக்கம் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. ஈங்கை சங்க இலக்கியங்களில் இது கொடி என்று கூறப்படுகிறது. நச்சினார்க்கினியர், இதனை ‘இண்டம் பூ’  என்பர்.  ஈங்கைக் கொடி பனிக்காலத்தில் செழித்து வளர்ந்து பூத்து நிற்கும். “வெண்கொடி ஈங்கைப் பைம்புதல் அணியும் அரும்பனி அளைஇய […]

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 20

வழை இப்பூவைத் தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ [கொங்கு முதிர் நறு வழை]  எனக் குறிஞ்சிப்பாட்டும், பொய்கைக் கரைகளில் வளர்ந்திருக்கும், மணம் நிறைந்த இதனைக் ‘கரையன சுரபுன்னை’ என்று பரிபாடல் (11:17)பாடுகிறது. பண்டை மக்கள் இதனைக் கண்ணியாகக் கட்டி அலங்கரித்துக் கொண்டனர் என்பதை, ‘வழைப் பூங்கண்ணி’ என்று வரும் புறப்பாடல் வரியால் (131:2) அறிகிறோம். நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் (அகநானூறு, 8); கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து சுரபுன்னை வளரும். குமணன் ஆண்ட முதிரமலையிலும், வளர்ந்திருந்தது (புறநானூறு, 158:21-22), தொண்டைநாட்டு […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 19

சிறுசெங்குரலி சிறு செங்குரலி என்று கபிலரும், கொங்குவேளிரும் பாடிய இதனைக் கருந்தாமக்கொடி என்றும் கூறுவர். குரலி சிறிய கொத்தான பூக்கள் கொண்டது. மருத நிலத்தது; செம்மை நிறப் பூ;  நீர்க்கொடி என்று குறிப்பிடுகின்றார் கு.வி.கிருஷ்ணமூர்த்தி. (தமிழரும் தாவரமும்,  ப. 100). ஒளி பொருந்திய செங்குரலிக் கொடியை உடைய நீர் நிலை என்பதை, “ஒண்செங்குரலித் தண் கயம் கலங்கி’ என்று புறப்பாடல் (283 : 1) குறிக்கிறது. கோடல் செங்காந்தள், கோடல் ஆகிய காந்தளின் இரண்டு வகைகள் தமிழிலக்கியத்தில் பலவிடங்களில் கூறப்பட்டுள்ளன. […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 18

ஞாழல் தமிழ்க் கவிஞர்கள் பலரால் பாடப்பெற்று, இலக்கியச் சோலைக்கு எழிலூட்டிய பல மலர்களுள் ஞாழலும் ஒன்றாகும். ஞாழல்மரம் இக்காலத்தில் புலிநகக் கொன்றை  (Tiger claw tree) என்னும் பெயர்கொண்டு விளங்குகிறது.       இதன் பூக்கள் ஐயவி என்னும் வெண்சிறு கடுகுபோல் இருக்கும். (குறுந்தொகை, 50:1) ஞாழல் ‘ஸ்டெர்கூலியேசீ’ (Sterculiaceae) எனும் கோக்கோமர வகுப்பைச் சேர்ந்தது. வளரிடம் நெய்தலுக்குரிய சிறந்தமரங்களுள் ஒன்று ஞாழல்                “ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்,                  கொழுநிழல் ஞாழல்” என்று கலித்தொகை (56:1-2) […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 17

நெய்தல்மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது. 1. நீள்நறு நெய்தல் – நீண்ட வாசனையுடைய நெய்தற்பூ. இதன் காம்பு நீண்டது. இது சுனைகளிலும், குளங்களிலும் பூக்கும் (வரி 79). 2. மணிக்குலைக் கள் கமழ் நெய்தல் – இது குறுகிய காம்பினை உடையது. இது வயல்களில் பூக்கும் (வரி 84). கருநீலமுடைய நெய்தல் பெரும்பான்மையும் கழிகளிலேயே காணப்படும். ஆனால், கழனி, கயங்கள் […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 16

தமிழகத்தில் தொன்றுதொட்டு பயிரிடப்பட்டுவரும், தமிழச் சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்துவிட்ட, நெல், கரும்போடு முதலிடம் வகிக்கும், முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும் தாவரமாகும் வாழை. இதன் அனைத்து உறுப்புகளும் பயன்படக் கூடியவை. வாழையைக் கிழங்குமூலம் பயிரிடுவார்கள். இதன் பல இனங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. வாழை அறிவியல் வகைப்பாட்டில் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். இது இலத்தீன் மொழியில் மூசா (Musa) எனப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன்முதலாக பப்புவா நியூகினியில் பயிரிடப்பட்டது. இன்று அனைத்து வெப்பவலயப் பகுதிகளிலும் […]