சோழர் காலத்தில் யானையை கோழி வென்றது : தொல்லியல் துறை ஆய்வாளர் தகவல்
”கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன்,” என, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், பத்மாவதி கூறினார்.சென்னை, தமிழ் இணைய கல்வி கழகத்தில், ‘தகவலாற்றுப்படை’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘பழந்தமிழ் கல்வெட்டுகள்’ என்ற தலைப்பில், பத்மாவதி பேசியதாவது: தமிழ் மொழிக்கு, சங்க காலத்தில் எழுத்து இருந்ததா, இல்லையா என்ற கேள்வி, 1882ல், தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படும் வரை நீடித்தது. வெங்கையா, கிருஷ்ண சாஸ்திரி, கே.வி.சுப்ரமணிய அய்யர், டி.வி.மகாலிங்கம், ஐராவதம் மகாதேவன், நாகசாமி போன்றவர்களால், […]