கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 5

குறிஞ்சி கடல் மட்டத்திற்கு ஆறாயிரம் அடிக்கு மேற்பட்டுள்ள இடத்தில் இயற்கையில் காணக்கூடிய செடி குறிஞ்சிச் செடியாகும். பிறசெடிகளுக்கு அத்தகைய வரையறை இச்செடிக்கிருப்பதுபோல்  கிடையாது. ஆறாயிரம் அடிக்கு மேற்பட்ட நிலம், மலையும் மலைசார்ந்த பகுதியாகத்தான் இருக்கும். இத்தன்மையின் அடிப்படைக் காரணத்தாலேயே, மலையையும் மலை சார்ந்த இடத்தையும் இச்செடியின் பெயரால் அழைத்தனர். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது இச்செடியின் பூவின் தனித்தன்மையாகும். இச்செடி ஒன்பது ஆண்டுகளிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலைச்சாரலில் கூட்டங்கூட்டமாகப் பூக்கும். இயற்கையில் இத்தகைய வியப்பிற்குரிய […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 4

2.  ஆம்பல் அல்லி அல்லது ஆம்பல்  நீரில்  வளரும்  ஒரு  கொடியும், அதில்  பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம்,பொய்கை, நீர்ச்சுனைகளிலும், கழனிகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் மிகுதியாக மலர்ந்திருக்கும். கொடியில் முள்போன்ற அமைப்பு இருக்கும். அதனை, ‘அம்முள் நெடுங்கொடி அருவி ஆம்பல்’ என்று வழங்கினர் (அகநானூறு, 96: 4-5). கார்காலத்தில் மழை பெய்து நீர் நிலைகள் நிறைந்திருக்கும்போது இது மிகுதியாக மலரும். அதனால்‘மாரி ஆம்பல்’ என்று குறித்தனர் (குறுந்தொகை, 117 :1). இது காலையில் நெய்தல் மலர்களுடன் மலர்ந்திருக்கும். […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 3

பூக்களைக் குறிக்கும் பாடல் அடிகள் “ …….. ……… ………. ….. வள் இதழ்ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,செங் கோடுவேரி, தேமா, மணிச்சிகை,உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,வடவனம், வாகை, வான் பூங் குடசம்.எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,பயினி, வானி, பல் இணர்க் குரவம்,பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,குரீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,போங்கம், திலகம், […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2

2.  கபிலர்  கபிலர், தமிழ்ச் சங்கப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் குறிஞ்சிப்பாட்டை இயற்றிய  ஆசிரியர். இவர் பிறந்தஊர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூர் என்று திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம் கூறும். இவர் அந்தணக் குலத்தவர் . “யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்”, “யானே தந்தை தோழன்; இவர் என் மகளிர்; அந்தணன், புலவன் கொண்டு வந்தனனே” (புறநானூறு, 200-201) என இவர் தம்மைக் கூறிக்கொள்வதாலும், “புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்” (மேலது, 126) என மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 1

குறிஞ்சிப்பாட்டு – அறிமுகம் பாண்டிவள நாட்டில் மதுரையம்பதியில் சங்கப் பலகையில் வீற்றிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்களாகிய நக்கீரர் முதலிய எண்மரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை,  குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பத்துப்பாட்டாகும்.        “முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை         பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய         கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்         பாலை கடாத்தொடும் பத்து” என்பதனால் இப்பெயர்களும் இவற்றின் முறையும் விளங்கும். இவை,“ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற்தெரிந்து, சான்றோர் உரைத்த தண்தமிழ்த் […]

தமிழ் எழுத்துக்களுடன் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘புலி குத்திக் கல்’: திருப்பூர் அருகே கண்டெடுப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலையில் உள்ள கொடுவாய் கிராமத்தில் புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றக்கூடிய ‘புலி குத்திக் கல்’ (நடுகல்) உள்ளது. இக் கல்வெட்டு குறித்து, திருப்பூரில் உள்ள வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த சு.வேலுச்சாமி, க.பொன்னுசாமி, சு.சதாசிவம், பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஆய்வு மைய இயக்குநர் சு.ரவிக்குமார் கூறியதாவது: மாட்டு மந்தையைக் காப்பாற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த வீரனின் நினைவாகவும், […]

சமணர்கள் ‘தாய் வீடு’ மதுரை!

தமிழகம் வந்த சமணர்கள் தங்கி இருந்து பணி செய்யவும், மக்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்திடவும் ஏற்ற மலை வாழிடங்கள் மதுரை பகுதியைச் சுற்றிலும் நிறைந்திருந்தன. எண்ணற்ற தமிழ் இலக்கியப் படைப்புகள் கொடுத்த சமணர்கள், தமிழ் தலைநகரான மதுரையைத் தேடியதில் ஆச்சர்யமில்லை. சங்க காலத்திலேயே சமணத் தலங்களாக மதுரையைச் சுற்றிய 14 மையங்கள் திகழ்ந்தன. இங்குள்ள கற்படுக்கைகள், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், சிற்பங்கள் இன்றும் பழமை வரலாற்று ஆதாரம் காட்டி நிற்கின்றன. மதுரையின் மாங்குளம், அரிட்டாபட்டி, திருவாதவூர், கிழவளவு, வரிச்சியூர், […]

சிறந்து வருக! சித்திரை மகளே!

‘விளம்பி’யது விரைந்து விழி மலரும்உளமதில் உள்ள குறை யகலும்வலம் வந்து வண்டமிழ் மொழிபேசிகுலமகளே! நலம்பயக்க வா!மகளே! ஒருமைபட்டு ஓரினமாய் ஒளிர்ந்து வா!வெறுமையில் வெந்து விடும் வேற்றினமே!வறுமையை வாளெடுத்து வீழ்த்தி விடுநன்னீராம் காவேரித்தாயை வாழ்த்திபாடு! சிறப்பு சிந்தை சிறகு விரித்துசிறந்து வருக! சித்திரை மகளே! விரும்பிய தெல்லாம் அரும்பும் ஆண்டு‘விளம்பி’யது கைக் கூடும்  நீ! வேண்டு!இனியவராய் மாந்தர் மங்காத மகிழ்வோடு இன்புறவே இனிக்கட்டும் இவ்வாண்டு! -புதுவை இரா.வேலு

கிழிந்த இலை போதும் !

பந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம் மறுக்கப்படும்போது, ‘அடுத்த பந்திக்கு வாருங்கள்’ என்று பந்தி மேய்ப்பவர் சொல்கிறபோது, அப்பாவித்தனமாக அல்லது கெஞ்சலாக திருப்பிச் சொல்கிறான், `கிழிந்த இலையே போதுமானது’ என்று. அடித்துப் பிடித்து முந்திவந்து நிற்பவனின் யாசிப்பு அது. எந்த நெருக்கடியையும் சின்னச் சலுகையான நிலைப்பாட்டின் மூலம் தப்பித்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பின்றி வேறல்ல. அதாவது 100 […]

மூப்பறியா மூதுரை மூதாட்டி : “ஔவை” !

மூப்பறியா சொற்சிலம்பில் முதுநூல் தந்தவள்மூப்புக்கு முத்தமிழ் காப்பு. முத்தமிழின் மூதாதை மூதுரை முழக்கத்தில்சித்தமும் தெளிவடையும் நல்வழி நா!ஓத!வித்தக அன்னையவள் ஆத்திசூடிஅருளியவள்சத்தியப்பாட்டி ஒளவை யறி! – புதுவை வேலு