இடக்க நாட்டு பொண்ணு வடக்க போனா வாழாது!

இன்று பேராசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது எங்கள் பேச்சு மரக்கானம் என்ற ஊர் பற்றி நீண்டது. மரக்கானத்தை அடுத்து இடைக்கழிநாடு என்ற ஊர் உள்ளது பற்றி நான் நினைவுகூர்ந்தேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தி வளமுடன் இருந்த அந்த ஊர் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் இலக்கியங்கள் கூறும் பகுதியை எடுத்து விளக்கினேன். இன்று அந்த ஊரின் நிலை பற்றி உரையாடிக்கொண்டிருந்தபொழுது பேராசிரியர் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த அந்தப் பேராசிரியருக்கு இடைக்கழிநாட்டில் திருமணத்திற்குப் பெண் […]

தமிழி எழுத்துப் பானை Ancient Tamil script

இந்தப் பானையில் உள்ள பண்டைய தமிழ் எழுத்துக்கள் – தமிழி எழுத்துக்கள் – பானை கிடைத்த இடம் மருங்கூர்மருங்கூர் சங்ககாலப் பாண்டியரின் துறைமுகம்.  அத்தியகான் என்று தெளிவாகப் படிக்கும்படியாக உள்ளது. அத்தி, மத்திசங்க கால மன்னர்களின் பெயர்கள் அதியன் என்னும் பெயர் அதிகன் எனவும் குறிக்கப்பட்டுள்ளது வாணிகன் – என்னும் பெயரில் – கன் – உள்ளது. இந்தக் [கன்] [கான்] ஆனதற்கான விளக்கம் தெரியவில்லை ஒற்று எழுதப்பட்டுள்ள முறையினை எண்ணும்போது இது பல்லவர் காலத்தோடு தொடர்புடையது ஆகலாம் அல்லது சற்றே முந்தையது ஆகலாம். […]