புறநானூற்றில் ஆட்சியியல்

புறநானூற்றில் ஆட்சியியல் முனைவர் கு. கணேசன், சாகித்திய அகாதெமி எழுத்தாளர், சேலம் உலகில் ஒப்பற்ற தாய்மொழியாம் தமிழ் மொழியை முத்தமிழ், பைந்தமிழ், செந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் எனச் சிறப்பித்து தொன்றுதொட்டு அழைப்பர், தமிழர். தமிழ் மக்களின் வாழ்வியலை வகுத்துக்காட்டும் கருவூலமாக தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களே சங்க இலக்கியங்கள். சங்க நூல்கள் மூன்று காலங்களையும் முகிழ்க்கும் பெட்டகம். அவை தமிழர்தம் பண்பாட்டுக் கூறுகளை வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கியவை. இது வாழ்வியலுக்கு இலக்கணம் கண்ட நூலாகும். சங்க காலத்தின் குறைபாடுகளைக் களைந்து வெளிக் கொணர்ந்தவை திருக்குறள். அன்றைய காலத்தின் […]

புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்

புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்      முனைவர் அ.சு.இளங்கோவன் ஒட்டன்சத்திரம்.                            தமிழர் வாழ்வியலை அகம் புறம் என்னும் இருபெரும் பிரிவுகளாகக் கண்டனர். இது அறம் பொருள் இன்பம் வீடு என்னும் பகுப்புக்கும் முன்னதாகும். அகம், அன்பின் சிறப்புக்களைப் பாடித் தனிமனிதர்களிடையே காதல் வாழ்வையும் குடும்ப வாழ்வையும் நெறிப்படுத்தியது. புறம், பொதுவாழ்வையும் மனிதன் உயர்நிலை எய்தும் சிறப்பையும் பாடியது. புறநானூறு தமிழர் பண்பாட்டின் களஞ்சியம். கி.பி. 1600 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பொற்காலம். ஆங்கில வாழ்வியலும் இலக்கியமும் உச்சி எய்தி உலகை வளைக்க வாய்ப்பளித்தன. ஆனால் […]

திருக்குறளும் அரிய தகவல்களும்

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812  * திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்  * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133  * திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380  * திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700  * திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250  * திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330  * திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000  * திருக்குறளில் […]

வட மொழி செய்த வினைகள்

வந்தாரை வாழவைக்கும் தமிழகமல்லவா? தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வட மொழியாளர்கள் இங்கு புகுந்துவிட்டனர். தமிழ்நாட்டில் தாராளமாகத் தம்மொழிச் சொற்களைப் பரப்பினர். எளிய, இனிய தமிழ்ச் சொல் பேசும் தமிழர், கடினமான உச்சரிக்க முடியாத வடமொழிச் சொற்களையும் கூறி மகிழ்ந்தனர். “மனம்” என்பது தமிழ்ச்சொல்; வடமொழியில் “ஹ்ருதய” எனக்கூறப்படும். வடமொழியை உச்சரிப்பது மிகக் கடினமானதாகும். அதற்கு முயற்சி அதிகம் தேவை. வாய், உதட்டளவில் தமிழை உச்சரிக்கும் நாம் வடசொல்லை உச்சரித்தால் அடிவயிற்றிலிருந்து முயலல் வேண்டும். தொல்காப்பியர் நாட்டில் மக்கள் […]

சங்க இலக்கியத்தில் வணிக மேலாண்மை

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழில் வழங்கும் ஒரு பழமொழி. பழமொழிகள் ஒவ்வொன்றும் பழமையான மொழிகள் மட்டுமன்று அவை ஒவ்வொன்றும் அனுபவ மொழிகள். வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. அனுபவங்கள் தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன. பொருள் நிறைந்ததாய் மாற்றுகின்றன. பொருள் என்றவுடன் வாழ்வதற்குப் பொருள் வேண்டும், நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டும் என்று படித்தவாசகம் ஒன்று நினைவுக்குளத்தில் நீச்சலடிக்கின்றது ஆம், வாழ்க்கை பொருளால் ஆனது. பொருள் நிறைந்தது. மனிதன் இனக்குழு சமூகமாக வாழ்ந்த போது தன்னிடமுள்ள பொருளைக் […]