ஜல்லிக்கட்டு வரலாறு

பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்கும் எம் இனத்தின் அடையாளம். ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் (இடையர்,யாதவர்) மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும்.  ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான் விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு கோனார்கள் எனப்படும் ஆயர்கள் (இடையர்) அதிகமாக வாழும் இடங்களில் நடத்தப்படுகின்றது  மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. கோனார்கள் அதிகமாக வாழும் தென் தமிழகம் […]

சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்

சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்! புத்தர் சிலைகளைத் தேடத் தொடங்கியபோது தெரிய வில்லை, அந்த ஆய்வு இந்த அளவுக்கு என் வாழ்க்கையை அர்த்தபூர்வமாக்கும் என்பது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நீளும் ஒரு பயணம்! வயற்காடுகள், ஆற்றங்கரைகள், இன்றைய நவீனத்தின் வெளிச்சம் அவ்வளவாகப் படாத கிராமங்கள் என்று சோழநாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பயணித்திருக்கிறேன். அந்தப் பயணத்தின் விளைவாகக் கண்டுபிடித்தவைதான் 65 புத்தர் சிலைகள்.எதிர்கொண்ட இனிய அனுபவங்கள் மட்டுமல்ல, எத்தனையோ தோல்விகளும் ஏமாற்றங்களும் […]

வரிச்சியூர் – குன்னத்தூர் மலை – எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு – வே.சிவரஞ்சனி

இயற்கை வாழிடம்! இறைவன் பூமி!! தொல்லியல் தேடல்கள்!!! வரிச்சியூர் – குன்னத்தூர் மலை!!!! எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு!!!! வே.சிவரஞ்சனி, ஒருங்கிணைப்பாளர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் மதுரை மாவட்டம் வரிச்சியூர் குன்னத்தூர் மலையில் மொத்தம் 4 தொல்லியல் சின்னங்கள் உள்ளன. அவை:1. உதயகிரீசுவரர் குடைவரை2. தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் உலகநாதீசுவரர் கோயில்3. அஸ்தகிரீசுவரர் குடைவரை4. நீலகண்டீசுவரர் குடைவரைஇதில் நீலகண்டீசுவரர் குடைவரை தவிர மற்ற 3 சின்னங்களும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் […]

நாளிதழ் செய்தி : உள்ளிக்கோட்டை புத்தர் : ஜனவரி 2005

1993 முதல் மேற்கொண்டு வருகின்ற களப்பணியின் போது மங்கலம், அய்யம்பேட்டை, புதூர், கோபிநாதப்பெருமாள் கோயில், குடவாசல், சுந்தரபாண்டியன்பட்டனம், திருநாட்டியத்தான்குடி, உள்ளிக்கோட்டை, குழுமூர், ராசேந்திரப்பட்டினம், வளையமாபுரம், திருச்சி, கண்டிரமாணிக்கம், கிராந்தி, மணலூர், பிள்ளைபாளையம்  ஆகிய இடங்களில்  புத்தர் சிலைகள் தனியாகவும், பிற அறிஞர்களோடு இணைந்தும் கண்டுபிடிக்கப்பட்டன. முந்தைய பதிவுகளில் திருநாட்டியத்தான்குடி வரையிலான இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் பற்றிய நாளிதழ் செய்திகளைக் கண்டோம். இப்பதிவில் உள்ளிக்கோட்டையில் திரு மாதவகுமாரசுவாமி அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் 2005இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக வெளியான […]

தமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்

உலகப் புகழ்[பெற்ற வூட்ஸ் எஃகு என்ற டமாஸ்கஸ் எஃகு பண்டைய சேரநாட்டில் தயாரிக்கப்பட்டது பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இரண்டாம் பதிவில் சேரநாட்டின் தலைநகராகக் கருதப்பட்ட கருவூருடன் ரோமாபுரி நாட்டு வணிகர்கள் கொண்டிருந்த தொடர்பு சங்க இலக்கியம்,  தொல்லியல், கல்வெட்டியல் மற்றும்  நாணயவியல் சான்றுகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது பற்றிக் கூறியுள்ளேன். இரும்புக் காலம் மற்றும் தொடக்க வரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த கொடுமணல், ஆதிச்சநல்லூர், மேல்சிறுவாளூர், குட்டூர், பொற்பனைக்கோட்டை, அரிக்கமேடு, மோதூர், பேரூர் போன்ற தமிழகத் தொல்லியல் களங்களில் மேற்கொள்ளப்பட்ட இரும்பு […]