கீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்
மண்ணில் புதையுண்டு போன எத்தனையோ வரலாறுகளை இந்தியத் தொல்லியல் துறையும், தமிழகத் தொல்லியல் துறையும் மீட்டெடுத்திருக்கின்றன. முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மூவேந்தர்களில் பாண்டியர்க்கு மட்டுமே உரியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழரது வாழ்வியலையும், வரலாறுகளையும் அகம், புறம் சார்ந்த 2300-க்கும் மேற்பட்ட சங்கப்பாடல்களைக் கொண்டு ஓரளவு நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது. புலவர்களின் பாடல்களில் கற்பனை கலந்திருந்தாலும் வரலாற்று உண்மைகளும் பெருமளவு இடம்பெற்றுள்ளன. கீழடி அகழாய்வுக் கண்டுபிடிப்புகள்: மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை […]