ராயக்கோட்டை அருகே 2,500 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே மலை உச்சியில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்களை அறம் வரலாற்று ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராயக்கோட்டை அருகே, கெட்டூர் கிராமத்தில் உள்ள மலை  உச்சியில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான, 50க்கும் மேற்பட்ட வெள்ளை  மற்றும் செந்நிற பாறை ஓவியங்கள் உள்ளன. இதனை கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல்  ஆய்வாளர்கள் பூங்குன்றன், சுப்பிரமணி, ராஜன் மற்றும் அறம் […]

தென்னிந்தியாவிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த புதைபொருள் !

உடல் எரிக்கப்பட்டு எலும்பும் சாம்பலும் வைக்கப்பட்டிருந்த ஏழு பண்டைய தாழிகள் புதுச்சேரி அரிக்கமேடு கிராமத்துக்கு அருகே கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு பெரிய முதுமக்கள் தாழி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரிக்கமேடு தொல்பொருள் ஆய்வு களத்திற்கு அருகில் மணவெளி என்ற இடத்தில் தனியார் ஒருவரின் நிலத்தில் கட்டடம் கட்ட அடித்தளம் தோண்டியபோது இவை கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு. 3 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று தாகூர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறுகிறார். 1989 ஆம் […]

புதுச்சேரி அகழாய்வில் இரண்டு தாழிகள், ஓர் ஈமப்பேழை கண்டெடுப்பு

தாழியின் தோற்றம் புதுச்சேரி அரியங்குப்பம் அடுத்த மணவெளிப் பகுதியில் கடந்த ஞாயிறு(31.01.2010) வீட்டுக்குக் கடைக்கால் தோண்டியபொழுது முதுமக்கள் தாழி கிடைத்தது.இதனால் வீடு கட்டும் பணி நிறுத்தப்பட்டு, தொல்பொருள் ஆய்வுத்துறை அறிஞர்களின் அகழாய்வுப் பணிக்குக் காத்திருந்தனர். தொல்பொருள் ஆய்வுத்துறை சார்ந்த அறிஞர்களும் புதுவைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் மணவெளிப் பகுதியில் கிடைத்துள்ள அகழாய்வுப் பொருள்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு புதைபொருளாகக் கிடைத்துள்ள தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்று அறிவித்தனர்.இக்கால கட்டத்தில் அருகில் உள்ள […]

புதுச்சேரி முதுமக்கள் தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு சார்ந்தவை

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில் வீடு கட்டுவதற்குத் தோண்டும்போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் கி.மு. 3 அல்லது 4-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கூறுகின்றனர்.எனவே தமிழக வரலாற்றின் தொன்மையை அறிவதற்கு இந்தச் சான்றுகள் பேருதவிபுரியும்.சென்னைத் தொல்பொருள் துறையின் துணை கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ரமேஷ் முளிமணி தலைமையில் ஒரு குழுவினர் இப் பகுதியை நேற்று ஆய்வு செய்தனர். அவர் கூறுகையில், இப்போது கிடைத்துள்ள ஒரு முதுமக்கள் தாழி காவல் […]

அழகன்குளம் அகழாய்வு – வே.இராஜகுரு

கிறிஸ்து பிறப்பதற்க்கு முன்பே தமிழ்நாட்டின் சில துறைமுகங்கள் எகிப்து, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா, மியான்மர், போன்ற நாடுகளுடன் கடல் வாணிகம் செய்து கொண்டிருந்தது என்பதற்கு பல தொல்பொருள் ஆதாரங்கள் உள்ளன. மிக நீண்டதொரு கடற்கரையைக் கொண்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்திலும் அத்தகைய சில துறைமுகங்கள் இருந்துள்ளன.  இராமநாதபுரத்தின் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் வைகை கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது  அழகன்குளம் எனும் ஊர். இங்கு  செய்யப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூர் சங்ககாலத்தில் மிக முக்கியமான துறைமுக நகராக இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.  தமிழ்நாடு அரசு தொல்பொருள் […]

தமிழக தொல்லியற் களங்கள் (Archaeological Sites in Tamil Nadu)

கொடுமணல் தொல்லியல் களம்  இன்றைய கொடுமணல் என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில்,  நொய்யல் ஆற்றின்  வட கரையில்,  ஈரோடு நகரிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் அமைவிடம்,  சங்ககாலச் சேரநாட்டின் தலை நகரமான  கரூரை,  மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. […]

பழமையான நகரம் ‘மாதரசன்பட்டணம்’ எனும் சென்னை: 651 வயதைக் கடந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் தகவல்

பழமைவாய்ந்த நகரமான சென்னைக்கு வயது 651 என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். மாதரசன்பட்டணம் (மதராசப் பட்டணம்) என்கிற சென்னை தொடர்பான தகவல்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள பென்னேஸ்வர மடம் கிராமத்தில் உள்ள பழங்கால கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் வருகையால் நம் பழங்கால வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு சான்றாக உள்ளது சென்னை நகரத்தின் பிறந்தநாள் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். ‘‘பென்னேஸ்வர மடம் கிராமத்தில் உள்ள பெரிய பாறை கல்வெட்டில் மதராசப்பட்ட ணம் குறித்து […]

கீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்

மண்ணில் புதையுண்டு போன எத்தனையோ வரலாறுகளை இந்தியத் தொல்லியல் துறையும், தமிழகத் தொல்லியல் துறையும் மீட்டெடுத்திருக்கின்றன. முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மூவேந்தர்களில் பாண்டியர்க்கு மட்டுமே உரியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழரது வாழ்வியலையும், வரலாறுகளையும் அகம், புறம் சார்ந்த 2300-க்கும் மேற்பட்ட சங்கப்பாடல்களைக் கொண்டு ஓரளவு நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது. புலவர்களின் பாடல்களில் கற்பனை கலந்திருந்தாலும் வரலாற்று உண்மைகளும் பெருமளவு இடம்பெற்றுள்ளன. கீழடி அகழாய்வுக் கண்டுபிடிப்புகள்: மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை […]

பூம்புகார் போல் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழ்கடலில் புதைந்து கிடக்கும் தமிழரின் தொன்மை!

விழுப்புரம்மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், திண்டிவனத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள எழில் வாய்ந்த நகரம் மரக்காணம். இது, வங்கக்கடற்கரையை அலங்கரித்த பண்டைய வணிக நகரமாகும்.கடற்கரை ஓரத்தில் மரங்கள் அடர்ந்து காணப்பட்டதால் மரக்காணம் என்ற பெயர் வந்தது என்பர். முதலாம் இராசராசன் காலத்தில், மனக்காணமான இராசராசப் பேரளம் என்று உப்பளங்களில் இருந்து வரும் வருவாய் கொண்டு விளக்கு எரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனக்காணம், பின்னர் மரக்காணமாக மறுவி இருக்கவும் வாய்ப்பு […]