தென்னிந்தியாவிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த புதைபொருள் !
உடல் எரிக்கப்பட்டு எலும்பும் சாம்பலும் வைக்கப்பட்டிருந்த ஏழு பண்டைய தாழிகள் புதுச்சேரி அரிக்கமேடு கிராமத்துக்கு அருகே கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு பெரிய முதுமக்கள் தாழி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரிக்கமேடு தொல்பொருள் ஆய்வு களத்திற்கு அருகில் மணவெளி என்ற இடத்தில் தனியார் ஒருவரின் நிலத்தில் கட்டடம் கட்ட அடித்தளம் தோண்டியபோது இவை கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு. 3 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று தாகூர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறுகிறார். 1989 ஆம் […]