தென்னிந்தியாவிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த புதைபொருள் !

உடல் எரிக்கப்பட்டு எலும்பும் சாம்பலும் வைக்கப்பட்டிருந்த ஏழு பண்டைய தாழிகள் புதுச்சேரி அரிக்கமேடு கிராமத்துக்கு அருகே கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு பெரிய முதுமக்கள் தாழி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரிக்கமேடு தொல்பொருள் ஆய்வு களத்திற்கு அருகில் மணவெளி என்ற இடத்தில் தனியார் ஒருவரின் நிலத்தில் கட்டடம் கட்ட அடித்தளம் தோண்டியபோது இவை கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு. 3 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று தாகூர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறுகிறார். 1989 ஆம் […]

புதுச்சேரி அகழாய்வில் இரண்டு தாழிகள், ஓர் ஈமப்பேழை கண்டெடுப்பு

தாழியின் தோற்றம் புதுச்சேரி அரியங்குப்பம் அடுத்த மணவெளிப் பகுதியில் கடந்த ஞாயிறு(31.01.2010) வீட்டுக்குக் கடைக்கால் தோண்டியபொழுது முதுமக்கள் தாழி கிடைத்தது.இதனால் வீடு கட்டும் பணி நிறுத்தப்பட்டு, தொல்பொருள் ஆய்வுத்துறை அறிஞர்களின் அகழாய்வுப் பணிக்குக் காத்திருந்தனர். தொல்பொருள் ஆய்வுத்துறை சார்ந்த அறிஞர்களும் புதுவைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் மணவெளிப் பகுதியில் கிடைத்துள்ள அகழாய்வுப் பொருள்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு புதைபொருளாகக் கிடைத்துள்ள தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்று அறிவித்தனர்.இக்கால கட்டத்தில் அருகில் உள்ள […]