அழகன்குளம் அகழாய்வு – வே.இராஜகுரு

கிறிஸ்து பிறப்பதற்க்கு முன்பே தமிழ்நாட்டின் சில துறைமுகங்கள் எகிப்து, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா, மியான்மர், போன்ற நாடுகளுடன் கடல் வாணிகம் செய்து கொண்டிருந்தது என்பதற்கு பல தொல்பொருள் ஆதாரங்கள் உள்ளன. மிக நீண்டதொரு கடற்கரையைக் கொண்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்திலும் அத்தகைய சில துறைமுகங்கள் இருந்துள்ளன.  இராமநாதபுரத்தின் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் வைகை கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது  அழகன்குளம் எனும் ஊர். இங்கு  செய்யப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூர் சங்ககாலத்தில் மிக முக்கியமான துறைமுக நகராக இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.  தமிழ்நாடு அரசு தொல்பொருள் […]

கீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்

மண்ணில் புதையுண்டு போன எத்தனையோ வரலாறுகளை இந்தியத் தொல்லியல் துறையும், தமிழகத் தொல்லியல் துறையும் மீட்டெடுத்திருக்கின்றன. முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மூவேந்தர்களில் பாண்டியர்க்கு மட்டுமே உரியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழரது வாழ்வியலையும், வரலாறுகளையும் அகம், புறம் சார்ந்த 2300-க்கும் மேற்பட்ட சங்கப்பாடல்களைக் கொண்டு ஓரளவு நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது. புலவர்களின் பாடல்களில் கற்பனை கலந்திருந்தாலும் வரலாற்று உண்மைகளும் பெருமளவு இடம்பெற்றுள்ளன. கீழடி அகழாய்வுக் கண்டுபிடிப்புகள்: மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை […]