புதுகை கடலோரப்‌ பசு பகுதி சிவன்‌ ஆலயத்தில்‌ 10-ம்‌ நூற்றாண்டு புத்தர்‌ சிலை கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை, நவ. 22: புதுக்‌கோட்டை – ராமநாதபுரம்‌ எல்லையில்‌ கடற்கரையில்‌ அமைந்துள்ள சுந்தரபாண்‌டியன்‌ பட்டி னத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர்‌- காமாட்சியம்மன்‌ கோயிலில்‌. 10-ம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்த புத்தர்‌ சிலை. கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கடற்கரைப்‌பட்டினங்களின்‌ கடல்‌ வாணிப வரலாறு: குறித்து ஆய்வுசெய்துவரும்‌ புதுக்‌கோட்டை அரசு அருங்காட்சியகக்‌ காப்‌பாட்சியர்‌ முனைவர்‌ ஜெ. ராஜாமுகமது புதன்கிழமை களப்பணி மேற்கொண்டபோது இந்தச்‌ சிலையைக்‌ கண்டெடுத்‌துள்ளார்‌. இதுகுறித்து அவர்‌ தெரிவித்தாவது: இப்பகுதியில்‌ பொன்பேத்தி என்னும்‌ ஊரில்‌ மட்டும்‌ புத்தமத .சின்னங்கள்‌ காணப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்‌கள்‌ […]

பழைமை, பழமை – எது சரி?

இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று திருக்குறளில் 801ஆம் குறட்பா அமைந்திருக்கிறது. இங்கே பழைமை என்னும் சொல்லை, நெடுங்கால நட்பு என்ற பொருளில் ஆள்கிறார். “நெடுங்கால நட்பு என்பது என்னவென்றால், அவ்விருவரின் உறவுக்கும் உரிமைக்கும் எந்தக் குறையையும் ஏற்படுத்தாத, கீழே பற்றி இழுத்து வீழ்த்தாத நட்பு” என்பது அக்குறளின் பொருள். தொன்மையோடு தொடர்புடைய அனைத்துமே பழைமை […]

தமிழில்‌ பேச அடித்தளம்‌ அமைத்திடுவோம்‌

1) அனைவரும்‌ தொலைபேசியில்‌ பேசுகிறீர்கள்‌. வணக்கம்‌, அய்யா வணக்கம்‌, என்று உங்கள்‌ பேச்சைத்‌ தொடங்க முயற்சி செய்யுங்களேன்‌. (ஹலோ வேண்டாம்‌. எலேய்‌, எல்லோ என்பது தான்‌ ஹலோ என்றானது எனவே அலோ என்று சொல்லுவது தவறில்லை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்‌ கொள்ளாதீர்கள்‌) 2) கண்ணாடி முன்‌ நின்று பேசுங்கள்‌. உங்கள்‌ முகம்‌ எப்படி இருக்கிறது என்று பாருங்கள்‌.ஒவ்வொரு ஒலிப்பின்‌ பொழுதும்‌ உங்கள்‌ முகம்‌ மாறுகிறதா அல்லது அப்படியே சிலைபோலவே இருக்கிறதா என்று பாருங்கள்‌. உங்கள்‌ முகம்‌ […]

சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் எனும் ‘சல்லி கட்டு’

சென்னை: மிருகவதை என்ற ஒற்றை சொல்லுக்குள் குறுக்கப்பட்டுவிட்டது தமிழரின் பல்லாயிரம் ஆண்டுகால ஏறு தழுவுதல் எனும் சல்லிக்கட்டு. இந்த சல்லிக்கட்டு என்கிற ஜல்லிக்கட்டை ஒழித்துவிடுவதன் மூலம் தமிழர் பண்பாட்டின் முதன்மை அடையாளம் அழிக்கப்பட்டுவிடும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் ‘மிருக ஆதரவாளர்கள்’. மலைபடுகடாம்: இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறுமலைத்தலை வந்த மரையான் கதழ்விடைமாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்பவள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைநல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை (மலை.330-335) ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்திருமாமெய் […]

திருவாதவூர் ஓவா மலை…

திருவாதவூர் மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், மதுரையின் வடகிழக்கு பகுதியான மேலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருவாதவூரின் சங்ககால வரலாற்றுப்  பெருமைகள், பெரும் புலவர் கபிலர் மற்றும் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகிய  இருவரும் பிறந்த ஊர். சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்களை தாங்கி கொண்டு, தமிழ்த்தாய் அந்த மலையை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இல்லையென்றால் இந்த மலையும் பூமிபந்திலிருந்து காணாமல் போயிருக்கும். இந்த மலையின் பெயர் ஓவாமலை அல்லது பஞ்ச பாண்டவர் மலை என்று இங்கு வாழ்ந்துவரும் மக்களால்  அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில்  இம்மலை உள்ளது.

தமிழ் பிராமி கல்வெட்டுகள்

தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 30 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களில் அறியப்பட்டு உள்ளன. 30 இடங்களில் 90 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. குறைந்தது 1 முதல் அதிகமாக 12 கல்வெட்டுகள் ஒரே இடத்தில் என இம் முப்பது இடங்களில் காணப்படுகின்றன. ஆனைமலை கல்வெட்டில் ‘அரட்ட’ என்ற சொல்லில் ‘ ட்’ என்ற மெய எழுத்துக்கு புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரச்சலூர்க் கல்வெட்டில் எழுத்துப் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பதில் எகரக் குறிலுக்கு புள்ளி […]

பாதாள கரண்டி

இது ஏதோ சமையல்கட்டில் பயன்படுத்தும் கரண்டி வகை என்று நினைக்கிறீர்கள். அப்படி தானே. அது தான் இல்லை. இது வேறு சமாச்சாரம். பல்வேறு சைசில் ஏறக்குறைய பத்து பதினைந்து கொக்கிகள் இணைக்கப் பட்ட ஒரு வித்தியாசமான கருவி தான் பாதாளக கரண்டி. கிணற்றில் எதாவது விழுந்து விட்டால் அதை தேடி எடுக்க பயன்படும் கருவி இது. இதில் உள்ள வளையத்தில் கயிறு கட்டிக் கிணற்றுகுள்ளே விட்டுத் துழாவணும். பாதாள கரண்டியில் வாளின்னா சீக்கிரம் மாட்டிக் கொள்ளும். குடம் […]

தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு)

`சாதியம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகின்ற வாழ்க்கை முறையாகும். இந்தியச் சமூக அமைப்பில் சாதிகள் தோன்றிய காலம் எது என்று வரையறுப்பது ஆய்வாளர்களிடம் விவாதப் பொருளாகவே உள்ளது. தொழில் பிரிவினையே சாதிகளாக மாறி வந்தன என்றும், நான்கு வர்ணங்களே சிதைந்து சாதிகளாயின என்றும், நிலவுடைமைக் காலகட்டமே சாதிகளின் தோற்றத்திற்கு காரணம் என்றும் பல்வேறு கருத்துகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. ஆயினும் உற்பத்தி உறவுகளுடன் தொடர்புடைய சாதியம், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபட்டுள்ளது. […]

பழைமை, பழமை – எது சரி?

இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று திருக்குறளில் 801ஆம் குறட்பா அமைந்திருக்கிறது. இங்கே பழைமை என்னும் சொல்லை, நெடுங்கால நட்பு என்ற பொருளில் ஆள்கிறார். “நெடுங்கால நட்பு என்பது என்னவென்றால், அவ்விருவரின் உறவுக்கும் உரிமைக்கும் எந்தக் குறையையும் ஏற்படுத்தாத, கீழே பற்றி இழுத்து வீழ்த்தாத நட்பு” என்பது அக்குறளின் பொருள். தொன்மையோடு தொடர்புடைய அனைத்துமே பழைமை […]

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்

நாயக்கர் காலமான பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில்தான் ஐரோப்பியர், கிறித்தவ சமயத் தொண்டு செய்வதற்குத் தமிழகம் வந்தனர். இவர்களுள் தத்துவ போதகர், வீரமாமுனிவர், சீகன்பால்கு ஐயர், போப் ஐயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் வீரமாமுனிவர் தமிழ் அகராதி அமைப்புக்கு வித்திட்டவர்; பேச்சு வழக்குச் சொற்களுக்கு இலக்கணம் வகுத்தவர்; அவற்றோடு தமிழில் சிறந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்த பெருமை அவரையே சாரும். மெய்யெழுத்துப் போலவே எ, ஒ என்னும் குறில் எழுத்துகள் இரண்டும் புள்ளி பெறும் என எழுத்து வரிவடிங்களைப் பற்றி இலக்கண நூல்களான தொல்காப்பியமும் நன்னூலும் […]