உலகப் பொதுமறையை உலகிற்கு எடுத்துகாட்ட புதிய முயற்சி !!! 1330 குறளும் ஒரே பட்டு சேலையில்!!! கோவையிலுள்ள பட்டுசேலை நெசவாளர்கள் 1330 குறள்கள் பொறிக்கப்பட்ட சேலையை நெய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்கள். இச்சேலை 6 1/4 மீட்டர்நீளமும், 48 அங்குல அகலமும், 1 1/2 கிலோ எடையும் கொண்டுள்ளது என பட்டு நெசவாளரான பாலசுப்பிரமணியன் என்பவர் தெரிவித்தார். 100,000 உரூபாய்கள் விலைமதிப்புள்ள இச்சேலை , 2010 ஆம் ஆண்டு கோவை உலகத்தமிழ் மாநாட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இச்சேலை நெய்ய நான்குமாதங்களானது என்பது குறிப்பிடத்தக்கது. வடிவமைத்தவர்களுக்கு எம் நன்றிகளும், பாராட்டுகளும்!
தமிழ்
தமிழ்செய்திகள்
திருக்குறள்
திருக்குறள் சேலை