வரிச்சியூர் – குன்னத்தூர் மலை – எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு – வே.சிவரஞ்சனி

இயற்கை வாழிடம்! இறைவன் பூமி!! தொல்லியல் தேடல்கள்!!! வரிச்சியூர் – குன்னத்தூர் மலை!!!! எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு!!!! வே.சிவரஞ்சனி, ஒருங்கிணைப்பாளர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் மதுரை மாவட்டம் வரிச்சியூர் குன்னத்தூர் மலையில் மொத்தம் 4 தொல்லியல் சின்னங்கள் உள்ளன. அவை:1. உதயகிரீசுவரர் குடைவரை2. தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் உலகநாதீசுவரர் கோயில்3. அஸ்தகிரீசுவரர் குடைவரை4. நீலகண்டீசுவரர் குடைவரைஇதில் நீலகண்டீசுவரர் குடைவரை தவிர மற்ற 3 சின்னங்களும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் […]

தமிழக தொல்லியற் களங்கள் (Archaeological Sites in Tamil Nadu)

கொடுமணல் தொல்லியல் களம்  இன்றைய கொடுமணல் என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில்,  நொய்யல் ஆற்றின்  வட கரையில்,  ஈரோடு நகரிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் அமைவிடம்,  சங்ககாலச் சேரநாட்டின் தலை நகரமான  கரூரை,  மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. […]

பழமையான நகரம் ‘மாதரசன்பட்டணம்’ எனும் சென்னை: 651 வயதைக் கடந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் தகவல்

பழமைவாய்ந்த நகரமான சென்னைக்கு வயது 651 என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். மாதரசன்பட்டணம் (மதராசப் பட்டணம்) என்கிற சென்னை தொடர்பான தகவல்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள பென்னேஸ்வர மடம் கிராமத்தில் உள்ள பழங்கால கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் வருகையால் நம் பழங்கால வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு சான்றாக உள்ளது சென்னை நகரத்தின் பிறந்தநாள் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். ‘‘பென்னேஸ்வர மடம் கிராமத்தில் உள்ள பெரிய பாறை கல்வெட்டில் மதராசப்பட்ட ணம் குறித்து […]

சென்னைக்கருகில் 30 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஊர்: கண்டுகொள்ளாத ஊடகங்கள்

அண்மையில் தலைநகர் சென்னைக்கு அருகிலேயே மிக அற்புதமான வரலாற்றுச் செய்திகள் கிடைத்திருக்கும் போது அதை எந்த தமிழ் ஊடகமும் இதுவரை கண்டுக்கொள்ளாத ஒரு வரலாற்றைப் பற்றிசொல்கிறேன் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பட்டரை பெரும்புதூர். கொற்றலை ஆற்றின் கரையோரம் இக்கிராமம் உள்ளது. பல்லவர் காலத்தில், இக்கிராமம், பெருமூர்என, அழைக்கப்பட்டதாக, பல்லவமன்னன் அபராசிதவர் மன்கல்வெட்டு கூறுகிறது. கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்கு மேல், பழமை வாய்ந்ததாக இக்கிராமம் கருதப்படுகிறது. பட்டரை பெரும்புதுாரில் உள்ள, கோவில்களில் பல்லவர் சோழர் […]

தொண்டி அருகே ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி கண்டுபிடிப்பு !

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், திருப்புல்லாணி உள்ளிட்ட பல இடங்களில் சமண தீர்த்தங்கரர்கள் சிற்பம் கிடைத்துள்ளன. மதுரை கீழவளவு குகைப் பகுதியில் உள்ள கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, தொண்டியைச் சேர்ந்த இலவோன் என்பவர் அங்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறது. இதன் மூலம் சமண மதத்தை பின்பற்றுவோர் சங்க காலம் முதல் இம்மாவட்டம் முழுவதும் இருந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே […]