ஜல்லிக்கட்டு வரலாறு

பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்கும் எம் இனத்தின் அடையாளம். ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் (இடையர்,யாதவர்) மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும்.  ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான் விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு கோனார்கள் எனப்படும் ஆயர்கள் (இடையர்) அதிகமாக வாழும் இடங்களில் நடத்தப்படுகின்றது  மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. கோனார்கள் அதிகமாக வாழும் தென் தமிழகம் […]

சங்ககாலக் குறுந்தொழில்கள்

முன்னுரைஇவ்வுலகம் பல்லுயிரினங்களால் சூழ்ந்தது. ஒவ்வொரு உயிர்களும் இப்புவியில் வாழ பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. உயிர்களில் ஆறறிவுள்ளவனாக மனிதர்கள் சுட்டப்படுகிறார்கள். நாடோடியாக வாழ்நத மனிதர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றாகச் சேர்ந்து வாழத் தொடங்கினர். குடும்பமாய் வாழ்ந்த மனிதர்களில் அறிவு மிக்கவனும், சோம்பலை போக்கியவனும், உழைப்பை மேன்மையாகக் கொண்டவனே நல்ஆடவர் என அழைக்கப்பட்டான். ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்ற குறுந்தொகை வரிகளுக்கு ஏற்ப ஆண்மகன் என்பவன் உழைப்புக்கு முன்னுரிமை வழங்கினான். தொழிலும் தொழிற் பிரிவுகளும்மலைகளை உடைத்துக் காடுகளாக்கியும், […]

பழந்தமிழர்களின் தொழில் மேன்மை

“பண்டையத்தமிழ் மக்கள் வணிகத்திலும், தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்கினர் என்பதை அண்மைக்காலத் தொல்லியல், கல்வெட்டியல், நாணய இயல் சான்றுகள் உணர்த்துகின்றன. இதனைச் சங்க இலக்கியங்கள் முழுமையாக வெளிப்படுத்தவில்லை” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள் (தொல்லியல் நோக்கில் சங்ககாலம், பக்: 79). தமிழர்கள் இரோம் நாட்டிற்கும், தாய்லாந்திற்கும் சென்று தங்கி வணிகம் புரிந்ததையோ, அவர்களின் பரவலான கல்வியறிவையோ சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை என்கிறார் அவர் (பக்: 80) சங்க காலத்தில் “எஃகும், வார்ப்பு இரும்பும் மேலை நாடுகளுக்கு மிகுதியாக […]

பழந்தமிழர் கடல் வணிகம் – 4

சங்க இலக்கியத்தில் வணிகம்: பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து அறிந்து கொள்ள சங்க இலக்கியத்தில் வணிகம் குறித்தும், கடல் வணிகம் குறித்தும் சொல்லப்பட்ட தரவுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆதலால் சங்க இலக்கியத்தில் வணிகம், கடல்வணிகம் முதலியன குறித்துப் பேசப்பட்ட விடயங்களை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புகார் வணிகர்கள்:   நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நல்நெஞ்சினோர்   வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி   கொள்வதூம் மிகைகொளா கொடுப்பதூம் குறைகொடாது   . . . . . . . . […]

பழந்தமிழர் கடல் வணிகம் – 2

பழந்தமிழர்களுடைய கடல்வணிகம் குறித்து இரு வருடங்களுக்கு முன் எழுதிய முதல் கட்டுரையில் பண்டைய காலம் முதல் கி.மு. 7ஆம் நூற்றாண்டுவரையான பழந்தமிழர்களின் கடல்வணிகம் குறித்து எழுதியிருந்தேன். கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதில் இது முதல் கட்டுரையாகும். இரண்டாவது கட்டுரை தமிழக வணிகத்தின் அளவீடைத் தெரிந்துகொள்ள நாணயங்கள் குறித்தும் வட இந்திய வணிகம் குறித்துமான கட்டுரையும், மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியத்தில் […]

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 23

பகன்றை மருத நிலத்திற்குரிய இக்கொடியைச் ‘சிவதை’ என்று நச்சினார்க்கினியரும்,.  பெருங்கையால் என்று அடியார்க்குநல்லாரும் (சிலப்பதிகாரம், 13 : 155-160 உரை) கூறுவர்.  இக்கொடி அகன்ற இலைகளைக் கொண்டது. தேன் மிகுதியாக உடைய, பனிக்காலத்தில் மலரும் பகன்றை மலர் வெண்மையான இதழ்களையும், பகலில் தோன்றும் திங்கள் போலும் உருவத்தினையும் கொண்டது. இதன் மணம் கள்ளின் மணம் போன்றிருத்தலால், இதனை இல்லத்தார் விரும்பிச் சூடுவதில்லை; முறுக்கிய ஆடையை ஒத்து விளங்கும். பகன்றை மலர் வயலிலும், சேற்றிலும், பசுமையான புதரிலும் மலரும் என இலக்கியங்கள் கூறுகின்றன (ஐங்குறுநூறு, […]

ஓசூர் அருகே படுதேப்பள்ளியில் அரிய வகை பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓசூர்: ஓசூர் அருகே படுதேப்பள்ளியில் அரிய வகை பாறை கல்வெட்டு மற்றும் நடுகல் தொகுப்பு கண்டறியப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த அறம் கிருஷ்ணன் தலைமையில் மஞ்சுநாத், பிரியன், சிவகுரு மற்றும் வெங்கடாசலபதி ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஓசூர் அருகே படுதேப்பள்ளியில் 10க்கும் மேற்பட்ட நடுகல் தொகுப்பு மற்றும் பாறை கல்வெட்டு, பழமையான கோட்டை சுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழுவினர் கூறியதாவது: படுதேப்பள்ளியில் சுமார் 10 அடி உயரமுள்ள […]

சிங்கப்பூர் தமிழ் சிற்றிதழ்கள் : சிங்கையில் தமிழ் IV

இளையர்களிடையே எழுத்து ஆற்றலை வளர்க்க சிற்றிதழ்கள் பெரிதும் துணை நிற்கின்றன. அதுமட்டுமின்றி பல்வேறு போட்டிகளும் இதில் நடந்தப்படுகின்றன. இளம் உள்ளூர் எழுத்தாளர்கள் கண்டறிய இது பெரிதும் உதவும். தமிழ் அமுதம் 2) செம்மொழி.; 3) பொழில் 4)வாதினி 5) சுட்டிமயில் (சிங்கை பதிப்பு) 6) தமிழ்மணி இது மட்டுமின்றி உள்ளூர் தமிழ்மின்னிதழ்களும் உள்ளன.இளமை தமிழ் இணையம் :சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 மற்றும் வசந்தம் ஒளிவழி சிங்கை ஒலி 96.8 வானொலிநிலையம் 24 மணிநேரம் தமிழ் ஒலிபரப்பைச் […]

தமிழுக்காக குவிந்த இளைஞர்கள் : சிங்கப்பூர்த் தமிழ் இளையர்மாநாடு 2016

கடந்த வாரம் (23, 24 ஆகிய தேதிகளில்) உலகமே படுவிரைவாக இயங்கிக் கொண்டிருந்தபோது, ஓசையின்றி ஒரு மிகச் சிறந்த நிகழ்வு சிங்கையில் நடைப்பெற்றது. பல இளைஞர்கள் கூடி,மிகச்சிறப்பாக நடைபெற்ற சிங்கப்பூர்த்தமிழ் இளையர் மாநாடு 2016 தான் அது. சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை மாணவர்கள் கடுமையாக உழைத்து இந்நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 150 இளையர்கள் இதில் கலந்துக் கொண்டனர் இன்றைய இளையர்களின் கையச்சு; நாளைய தலைவர்களின் பாதச்சுவடு எனும் கருப்பொருளைத். தாங்கி மலர்ந்தது […]

மலேசியாவில் தமிழ்கல்வியின் வயது 200 ஆண்டு : அஞ்சல் தலை வெளியீடு!

மலேசிய நாட்டில் ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் தொடங்கப்பட்ட தமிழ்க்கல்வி கற்பித்தல் இவ்வாண்டுடன் 200 ஆண்டுகள் முழுமை பெறுகிறது. 1816 ஆம் ஆண்டு, பினாங்கு பிரிபள்ளியில் முதல் அலுவல் பூர்வ தமிழ்வகுப்பு தொடங்கப்பட்டது. அன்றுதொட்டு, இன்றுவரை தமிழ்க்கல்வி பலமாறுதல்களையும், மேம்பாடுகளையும் கண்டுசிறப்பாக மலேசிய மண்ணில் மிளிர்கிறது. மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டுகால வரலாறு விழாக்கோலம் காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மலேசியத்தமிழ் அறவாரியம் முன்நின்று செய்கிறது. மலேசிய மண்ணில். தமிழ்க்கல்வியின் 200ஆம் ஆண்டு நிறைவின் பொருட்டு மலேசியத்தமிழ் அறவாரியம் […]