மூப்பறியா மூதுரை மூதாட்டி : “ஔவை” !
மூப்பறியா சொற்சிலம்பில் முதுநூல் தந்தவள்
மூப்புக்கு முத்தமிழ் காப்பு.
முத்தமிழின் மூதாதை மூதுரை முழக்கத்தில்
சித்தமும் தெளிவடையும் நல்வழி நா!ஓத!
வித்தக அன்னையவள் ஆத்திசூடிஅருளியவள்
சத்தியப்பாட்டி ஒளவை யறி!
– புதுவை வேலு