இனி ஒவ்வொரு ஆண்டும் சனவரியை தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவித்த கனடா அரசு

கனடா அரசு 2017-ம் ஆண்டு முதல் இனி ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதம் தமிழ் பண்பாட்டு மாதமாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருக்கிறது. தனிநபர் முன்மொழிவாக சுகாபரோ-ரூச் (ஸ்காபரோ-ரூஜ்) பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அரி ஆனந்தச ங்கரியால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு கடந்த மே மாதம் 20ஆம் திகதியும் செப்ரெம்பர் 29 ஆம் திகதியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பின் அனைத்துக் கட்சிகளின் ஒட்டு மொத்த. ஆதரவுடன் கனேடிய பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விவாதம் நடைபெற்ற இரண்டு தினங்களிலும் […]

2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே தாய்லாந்தில் தமிழர்கள் தடம் பதித்த சுவடுகள் – தொன்மை ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு

தாய்லாந்து நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தமிழர் தொன்மம் பரவி உள்ளது என கடல்சார் தமிழியல் தொன்மை ஆய்வாளர் ஒடிசா பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறிய பல தகவல்கள் பின்வருமாறு உலகம் முழுதும் தமிழர்கள் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடல் வழியாக வணிகம் செய்ததற்கான ஏராளமான அடையாளங்கள் உள்ளன. வங்காள விரிகுடா, அந்தமான் கடல் பகுதியின் வழியே ஆமையின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பகுதிகளில் வணிகம் செய்துள்ளனர். அதாவது தமிழ்நாட்டில் இருந்து […]

பிரான்சில் தமிழக மாணவர் படுகொலை !

பிரான்சில் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தை சேர்ந்த மாணவரொருவர் கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு, கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன். மாணவரான இவர் பாரீசிலுள்ள உயர் மின்னணுவியல் கல்லூரியில் மின்னணுவியலில் முதுகலை மேற்படிப்பு படித்து வந்தார்.கடந்த வியாழனன்று பணி முடித்ததும் பாரீசு வட்டம் 15 இல் உள்ள நண்பரை சந்திப்பதற்காக. மெட்ரோவிற்கு ஏறக்குறைய இரவு 11.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் அவரிடமிருந்த கைப்பேசியை பறித்ததாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரை கத்தியால் குத்திவிட்டு அவர்கள் […]

ஆசுத்திரேலிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி : நாடாளுமன்ற உறுப்பினர் காோிக்கை!

ஆசுதிரேலியாவின் தேசிய கல்வித்திட்டத்தில் தமிழ்மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என ப்ராசுபெக்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கூக்மெக்டெர்மாட் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் நியூசவுத் வெல்சு நாடாளுமன்றத்தில் பேசும் போது, உலகின் தொன்மையான மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் கல்வியும், கலாச்சாரமும் இந்தியா மற்றும் ஆசுத்திரேலியாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் மக்கள் தமிழ்மொழி பேசுகின்றனர். தமிழ்மொழியை பாடப்புத்தகத்தில் சேர்த்துக் கொள்வதன் […]