இராசபக்சேவின் வருகையை எதிர்த்து மலேசியத் தமிழர்கள் கொந்தளிப்பு !

வெள்ளி ராசபக்சேவின் மலேசிய வருகையைக் கண்டித்து மலேசியாவின் ஈப்போ உட்பட பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும் ராசபக்சேவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று ம இகா இளைஞர்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. காவல்துறையிலும் புகார் அளித்துள்ளது. கோலாலம்பூர்.; மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்சேவிற்கு எதிராக மலேசியாவில் வாழும் தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்சேவிற்கு நமது மலேசிய அரசாங்கம் முற்றிலுமாக […]

திருச்சி மாணவர்கள் நிகழ்த்திய தாய்த்தமிழின் முதலெழுத்து உலக சாதனை !

தாய்த்தமிழின் முதலெழுத்தான அ எனும் உயிரெழுத்தை 7100 மாணவ மாணவிகள் அழகுற அமைத்து உலக சாதனை படைத்துள்ளனர். ஆகத்து 30 ஆம் தேதி காலை திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தியாகேசர் ஆலை பள்ளிவளாகத்தில் கின்னசு உலக சாதனைக்காக 7100 பள்ளி மாணவர்கள் பங்கேற்று தமிழ் எழுத்து வடிவில் நின்று சாதனை படைத்தனர்… மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று கையில் வைத்திருந்த மஞ்சள் நிறஅட்டையை உயர்த்திப் பிடித்ததை என்ற எழுத்து பிரமாண்டமாக தெரிந்தது.சுமார் 5 […]

சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 3

அசோகர் கல்வெட்டுக்களில் காணப்படும் பிராமி வரி வடிவத்துடன் ஒப்புநோக்கி இவை பிராமி வரிவடிவத்தை ஒத்துள்ளன என்ற கருத்தை வெளியிட்டவர். 1906 இல் மறுகால் தலைக்கல்வெட்டைக் கண்டுபிடித்து அதைப் படிக்க முயற்சித்தார்.கல்வெட்டுமொழி பாலியாக இருக்க வேண்டும் எனக் கருதினார். கிடைத்த 30 கல்வெட்டுக்களைக் கொண்டு தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்பு எழுத்துக்களான போன்றவற்றை தமிழ்எழுத்துக்கள் தான் எனச் சரியாக ஊகித்தார். 1924இல் சென்னையில் நடந்த மொழியியல் மாநாட்டில் முதன்முதலாக இவை தமிழ்மொழியைச் சேர்ந்தவையே என ஆணித்தரமாக உரைத்தார்.இதனால் இவர் […]

மடகாசுகர் நாட்டில் ஏறுதழுவல் (சல்லிக்கட்டு) !

மடகாசுகர் நாட்டில் சவிகா என்ற பெயரில் தமிழ்நாட்டைப் போலவே சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவல் நடைபெறுகிறது.அண்டனானரீவோ (Antananarivo) அல்லது டனானரீவ் (Tananarive) என்றழைக்கப்படும் மடகாசுகரின் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் பெத்சிலியோ எனப்படும் சமூகமக்களால் இவ்விளையாட்டு தமிழகத்தைப் போலவே சிறிய கிராமங்களில் நிகழ்த்தப்படுகிறது. இவ்விளையாட்டில் மாடுகளை அடக்க விரும்பும் எந் தபெத் சிலியோ சமூகத்தை சேர்ந்த மனிதரும் மாடு பிடிக்கச் செல்லலாம். இப்பகுதிகளில் வேளாண்மையே முதன்மையான தொழிலாக உள்ளது. நெல்வயல்களில் பயிரிடத் துவங்கும் காலத்தில் இவ்விளையாட்டு நடைபெறுகிறது.மேலும், இவ்விளையாட்டை வீரத்தின் […]

பிரான்சு நாட்டின் தொடர்வண்டிகளில் திருக்குறள் !

ஐரோப்பிய நாடான பிரான்சின் தொடர்வண்டியில், அந்நாட்டின் தேசியமொழியான பிரெஞ்சில் நம் தமிழர் மறையான திருக்குறள் பதியப்பட்டுள்ளது. மேலும் அதில் திருவள்ளுவர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. “மாதர் முகம் போல் ஒளிவிடவல்லையேல் காதலை வாழிமதி”எனும் குறளே பிரெஞ்சு மொழியில் பதியப்பட்டுள்ளது நாம் மிகவும் பெருமைப்படத்தக்க விடயமாகும். திருக்குறள் ஏற்கனவே பிரெஞ்சு, லத்தீன், போலீச்,இரசியன், சுவீதிசு செர்மன், சப்பானிசு, டச், செக், பினீசு.; மலாய், பர்மீசு, கொரியன், சீனம், சிங்களம், இத்தாலியன், உருது, பிசிஅரபி, நார்வேசியன், இசுபானிசு அங்கேரியன் உட்பட. வங்காளம், […]

சீனாவில் தமிழ் கல்வெட்டு !

சீனாவில் தமிழர்களின் வணிகம் சீன நாட்டில் காண்டன் சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயிலில் சீன பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதை குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன் சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் […]

தமிழகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மீசை வைத்த புத்தர் சிலை!

புத்தமும், சமணமும் தமிழினத்தின் தொன்மையான மதங்களாக இருந்து வந்துள்ளன. சிலப்பதிகாரத்தில் இது குறித்த குறிப்புகள் நிறைய காணக்கிடைக்கின்றன. மேலும், பல சமணப்படுகைகள் தமிழகமெங்கும் காணக் கிடைக்கின்றன. பல புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இப்படி தமிழகத்தின் தொன்மையான புத்தம் மற்றும் சமணம் பற்றி ஆய்வு செய்த முனைவர்.சம்புலிங்கம் அவர்கள் மீசை வைத்த அரிய புத்தர் சிலையை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிந்துள்ளமை என்னுடைய களப்பணியில் நான் கண்டுபிடித்த சிலைகள் மிகவும் ஆச்சரிய கூட்டுபவை. திருச்சி மாவட்டத்தில் மங்கலம் என்னும் ஊரில் […]

பிரான்சில் தமிழர்கள் நடத்திய கவிஞர் நா.முத்துக்குமாரின் வணக்க நிகழ்வு

தமிழ் உலகை ஆறாப் பெருந்துயரில் ஆழ்த்திய கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பிரான்சில் இன்று (17.08.2016) மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. பிரான்சு ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றிருந்த இந்த வணக்க நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கெடுத்து தங்களது மரியாதை வணக்கத்தினை செலுத்தினர். வணக்க உரைகள், பாடல்கள், கவிதை, விவரணக்காட்சி என நா.முத்துக்குமார் அவர்களது நினைவுகளைத் தாங்கியதாக நிகழ்வு அமைந்திருந்தது. நா.முத்துக்குமார் படைத்த பாடல்களுக்கும், கவிதைகளுக்கும், படைப்புகளுக்கும் பின்னால் இருந்த அறமும், மனிதநேயமும், அன்புமே அவனை தமிழ் […]

இன்றைக்கும் வாழும் சங்கவழக்குகள் – பகுதி : ஆறு

நெடுவழியில் நடந்து செல்கிறோம். நல்ல பசி. எதிரே ஒரு மாமரம் தெரிகிறது. ஆசையுடன் அருகே சென்று ஏதாவது பழம்.தொங்குகிறதா என்று கழுத்தைப் பின்புறம் நன்கு வளைத்து, முகத்தை மேலே உயர்த்திப் பார்க்கிறோம். நல்லா அண்ணாந்து பார், உச்சியில ஒரு பழம் மாதிரி தெரியுது என்று அடுத்தவர் சொல்கிறார்.இதேபோல் தான் ஒரு யானை மூங்கில் காட்டுக்குள் செல்கிறது. மூங்கில்களில் சில காலங்களில் நெல் போன்ற விதைகள் கொண்ட கதிர்கள் உருவாகும். இதனை நாம் மூங்கில் நெல் என்கிறோம். யானைகளுக்கு […]

இளைஞர்கள் ஒன்றிணைந்து சீரமைத்த 1000 ஆண்டுகள் பழமையான சோழர்கால ஆலயம் !

நண்பர்கள் தினத்தன்று வெங்கடாசலபுர இளைஞர்கள் இணைந்து ஏரிக்குச் செல்லும் பாதையில் 1000 வருடங்கள் பழமையான சோழர்கால சிவாலையத்தையும், அதை சுற்றி இருந்த சீமைகருவேல முல்லை அழித்தும் சுத்தம் செய்தனர். இம்மண்டபத்தின் அருகில் இருக்கும் செக்குகல்வெட்டு இக்கோயில் சோழன்பரகேசரிவர்மன் (முதலாம்பராந்தகன் (அ) உத்தமசோழன் கி.பி 911 (அ) 974) ஆட்சிகாலத்தில் கட்டப்பெற்றது இக்கல்வெட்டு இங்கிருந்த சிவன் பெயர் பூந்துறைதேவர் என்றும், இங்கு இருந்த இலுப்பை மரங்களில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு, அவ்விதைகளை செக்கில் இட்டு, அதில் வரும் எண்ணையினை […]