இராசபக்சேவின் வருகையை எதிர்த்து மலேசியத் தமிழர்கள் கொந்தளிப்பு !
வெள்ளி ராசபக்சேவின் மலேசிய வருகையைக் கண்டித்து மலேசியாவின் ஈப்போ உட்பட பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும் ராசபக்சேவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று ம இகா இளைஞர்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. காவல்துறையிலும் புகார் அளித்துள்ளது. கோலாலம்பூர்.; மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்சேவிற்கு எதிராக மலேசியாவில் வாழும் தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்சேவிற்கு நமது மலேசிய அரசாங்கம் முற்றிலுமாக […]