TAMIL LANGUAGE & LITERATURE – Tholthamizh – Ma. So. Victor

தமிழ் மொழியை ஆய்வு செய்வோர், அதற்கான தரவுகளை பல்வேறு தளங்களிலும் தேடவேண்டியுள்ளது. திராவிட மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் தமிழ் விளங்குகின்றது என்ற கொள்கை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.கி.பி பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகம் வந்த ஐரோப்பியர்கள்தாம், தமிழைக் கற்று தமிழின் சிறப்பைத் தமிழருக்கே உணர்த்தினர். தமிழர்கள், உலகின் மேற்குத் திசையை நோக்க, ஐரோப்பியர்களே, அவ்வாயிலைத் திறந்து விட்டனர். அதுவரையில் தமிழ் மொழியை மட்டுமே அறிந்திருந்த தமிழர், மேலை மொழிகளையும் கற்கத் தொடங்கினர். வீரமாமுனிவர், கால்டுவெல் கங்காணியார், […]

தஞ்சைப் பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டு புதிர் !

பெரிய கோயில் என அறியப்படும் தஞ்சை சிவன் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆவதை சிறப்பிக்கும் விதமாகத் தமிழக அரசு விழா ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது. இந்தக் கோயிலைக் கட்டியது யார் என்ற வரலாறு தமிழக மக்களுக்கு வெகு காலம் வரை தெரியாமல் இருந்தது. கிருமி கண்ட சோழன் என்னும் கரிகாலனால் இக்கோயில் கட்டப்பெற்றது என்றும் அவனுக்கிருந்த குட்ட நோய் இங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் நீங்கியது என்றும் பிரகதீஸ்வரர் மகாத்மியம் என்னும் வடமொழிப் புராணமும் , […]

களப்பிரர் – தமிழகத்தின் முதல் குடியாட்சி

களப்பிரர் காலம் தமிழ்வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 – 5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம். தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப்பட்ட காலம் கி.மு. 1 – முதல் கி.பி. 5 – ஆம் நூற்றாண்டு வரையே. ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்டகாலம், […]

2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே தாய்லாந்தில் தமிழர்கள் தடம் பதித்த சுவடுகள் – தொன்மை ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு

தாய்லாந்து நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தமிழர் தொன்மம் பரவி உள்ளது என கடல்சார் தமிழியல் தொன்மை ஆய்வாளர் ஒடிசா பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறிய பல தகவல்கள் பின்வருமாறு உலகம் முழுதும் தமிழர்கள் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடல் வழியாக வணிகம் செய்ததற்கான ஏராளமான அடையாளங்கள் உள்ளன. வங்காள விரிகுடா, அந்தமான் கடல் பகுதியின் வழியே ஆமையின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பகுதிகளில் வணிகம் செய்துள்ளனர். அதாவது தமிழ்நாட்டில் இருந்து […]

தமிழர்களின் வைகை ஆற்று நாகரீகம் !

மனிதகுலத்தின் நாகரீகங்கள் எல்லாம் நதிக்கரையின் ஈரமணலில் தான் தொடங்கின. வருடம் முழுவதும் தண்ணீர் ஓடும் ஜீவ நதிக்கரையில் தான் பெருநகரங்களும் நாகரிகமும் தழைத்தோங்கும் என்பது இல்லை. ஜீவநதி அல்லாத வரளும் நதிக்கரையிலும் மனித நாகரிகம் தழைத்தோங்கும் என்பதற்கான சான்று தான் வைகை. தமிழ்நாகரிகத்தின் தொட்டிலாக வைகையே இருந்துள்ளது. வருடத்தில் நான்கு மாதங்களே நீர் ஓடும் வைகையின் கரையில், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கூட்டம் செழித்தோங்கி வளர்ந்துள்ளது. மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு, வைகை நதிக்கரை நாகரிகத்தைப் […]

இன்றைய திருப்பதியும், குமரி கண்டமும்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம் என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப்பாயிரம் பாடியபனம் பாரனார் தமிழகத்தின் நிலஎல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதி தானா? தென்குமரி என்பது இன்றைய குமரி முனையா அல்லது கடல்கோளால் அழிந்து போன குமரிக்கண்டமா? முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றிப் பாடும் காரிக்கிழார் என்ற புலவர் தமிழ் ஆட்சிப் பரப்பை அது பனிபடு நெடுவரை வடக்கும்.தெனா அது உருகெழு குமரியின் தெற்கும் குணா அது கரை பொருதொடு கடற்குணக்கும் குடா அது தொன்று முதிர் […]