தமிழர்களின் வைகை ஆற்று நாகரீகம் !
மனிதகுலத்தின் நாகரீகங்கள் எல்லாம் நதிக்கரையின் ஈரமணலில் தான் தொடங்கின. வருடம் முழுவதும் தண்ணீர் ஓடும் ஜீவ நதிக்கரையில் தான் பெருநகரங்களும் நாகரிகமும் தழைத்தோங்கும் என்பது இல்லை. ஜீவநதி அல்லாத வரளும் நதிக்கரையிலும் மனித நாகரிகம் தழைத்தோங்கும் என்பதற்கான சான்று தான் வைகை. தமிழ்நாகரிகத்தின் தொட்டிலாக வைகையே இருந்துள்ளது. வருடத்தில் நான்கு மாதங்களே நீர் ஓடும் வைகையின் கரையில், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கூட்டம் செழித்தோங்கி வளர்ந்துள்ளது. மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு, வைகை நதிக்கரை நாகரிகத்தைப் […]