பழைமை, பழமை – எது சரி?

இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று திருக்குறளில் 801ஆம் குறட்பா அமைந்திருக்கிறது. இங்கே பழைமை என்னும் சொல்லை, நெடுங்கால நட்பு என்ற பொருளில் ஆள்கிறார். “நெடுங்கால நட்பு என்பது என்னவென்றால், அவ்விருவரின் உறவுக்கும் உரிமைக்கும் எந்தக் குறையையும் ஏற்படுத்தாத, கீழே பற்றி இழுத்து வீழ்த்தாத நட்பு” என்பது அக்குறளின் பொருள். தொன்மையோடு தொடர்புடைய அனைத்துமே பழைமை […]

மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை !

“மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்,அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்” கவிஞர் கண்ணதாசனின் இனியகவி மொழியில், டி.எம்.சௌந்தரராசன் அவர்களின் தேனினும் இனியகுரலில், பாசமலர் எனும் திரைப்படத்தின் பிரபலமான பாடல் இது. இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த போது, நண்பர் கேட்ட ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. ஒரு தங்கை உறங்குகிறாள், ஆனால் கவிஞர் மலரைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்லாமல் ஏன்மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்ல வேண்டும் என்ற வினாவை […]