மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை !

“மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்,அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்” கவிஞர் கண்ணதாசனின் இனியகவி மொழியில், டி.எம்.சௌந்தரராசன் அவர்களின் தேனினும் இனியகுரலில், பாசமலர் எனும் திரைப்படத்தின் பிரபலமான பாடல் இது. இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த போது, நண்பர் கேட்ட ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. ஒரு தங்கை உறங்குகிறாள், ஆனால் கவிஞர் மலரைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்லாமல் ஏன்மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்ல வேண்டும் என்ற வினாவை […]