சங்க கால கொற்கைப் பாண்டியன் ‘மாறன்’ பெயர் கொண்ட வித்தியாசமான நாணயம்: புதிய தகவல்
நாணயத்தில் சங்க கால கொற்கைப் பாண்டியன் ‘மாறன்’ பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாக தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கிடைத்த நாணயம் ஒன்று உருவங்கள் ஏதும் தெரியாத அளவுக்கு கறுப்பு நிறத்தில் கடினமான மாசு படிந்திருந்தது. பல நாட்கள் மெதுவாக சுத்தப்படுத்தினேன். அந்த நாணயத்தின் முன்புற மத்தியில் சிதைந்த நிலையில் ஒரு உருவம் உள்ளது. சிதைந்த உருவத்தின் மேல், தமிழ் – பிராமி எழுத்து […]