தொண்டி அருகே ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி கண்டுபிடிப்பு !

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், திருப்புல்லாணி உள்ளிட்ட பல இடங்களில் சமண தீர்த்தங்கரர்கள் சிற்பம் கிடைத்துள்ளன. மதுரை கீழவளவு குகைப் பகுதியில் உள்ள கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, தொண்டியைச் சேர்ந்த இலவோன் என்பவர் அங்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறது. இதன் மூலம் சமண மதத்தை பின்பற்றுவோர் சங்க காலம் முதல் இம்மாவட்டம் முழுவதும் இருந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே […]