சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் !

(தமிழி அல்லது தமிழ் பிராமி (பொ.ஆ.மு.5 – பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டு) சங்ககாலத்தில் தமிழ்மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெறுகின்றன. சங்ககாலத் தமிழ் எழுத்துக்கு வழங்கப் பெற்ற பிறபெயர்கள் : இவ்வெழுத்துக்கள் தமிழி, தமிழ்பிராமி, பழந்தமிழ் என்று பலவாறாக அழைக்கப் பெறுகின்றன. அவற்றுக்கான காரணம் பின்வருமாறு வட இந்திய பிராமி எழுத்துக்களுக்கும் சங்ககாலத் தமிழகத்தில் வழக்கத்திலிருந்த எழுத்துக்களுக்கும் உருவ அளவில் ஒற்றுமை இருப்பினும் பல வேறுபாடுகள் உள்ளன. வர்க்க […]

சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 2

சங்ககாலத்தமிழ் (தமிழி) எழுத்துகளின் தோற்றமும் கண்டுபிடிப்பு வரலாறும் (பொ.ஆ.மு. 400 -பொ.ஆ.300) மேற்சுட்டியது போல் சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்தின் வரி வடிவம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வெளி உலகிற்கு வந்தது. அதுவரையில் பொ.ஆ. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற தமிழ் எழுத்துக்களும் பொ.ஆ. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியரது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற வட்டெழுத்துகளும் காலத்தால் முற்பட்ட வரிவடிவங்களாக கருதப்பெற்றது. ஒரு மொழிக்கு இருவேறு வரிவடிவங்கள் இருப்பது ஆய்வறிஞர் மக்களிடையே குழப்பத்தை […]