கையூட்டு வாங்கினாலும், கொடுத்தாலும் மரணதண்டனை விதித்த அரசன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல்

தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சிகாலத்தில் கையூட்டு (லஞ்சம்) கொடுத்தாலும், வாங்கினாலும் மற்றும்அதைத் தடுக்கத் தவறியஅரசு அதிகாரிக்கும் மரணதண்டனை வழங்க மன்னன் ஆணை பிறப்பித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது பென்னேசுவரமடம் கிராமம். இங்குள்ள பென்னேசுவரர் கோயில் மிகவும் பழமையானது, பெயர் பெற்றது. இந்தக்கோயில் கல்வெட்டில் இலஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மற்றும் அதை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கும் மரணதண்டணை விதிக்கும் வகையில் மன்னன் ஆணையிட்ட கல்வெட்டு உள்ளது. இதுகுறித்து கிருட்டிணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த […]