புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலருக்கு ‘பைந்தமிழ்ச் செம்மல்’ விருது

அன்று மணலூர்ப்பேட்டையில் தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம், மணலூர்ப்பேட்டை தமிழ்ச்சங்கம், நிலாமுற்றம் மாத இதழ் இணைந்து நடத்திய வானவில் விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் சிறந்த முறையில் தமிழ்த் தொண்டாற்றி வருவதைப் பாராட்டி பைந்தமிழ்ச் செம்மல் விருது அவருக்கு வழங்கப்பட்டது.பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.தாமோதரன், சின்னத்திரை நடிகர் கவிஞர். கலைமாமணி அமரசிகாமணி, புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து, தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கநிறுவனத் தலைவர் சுடர். முருகையா ஆகியோர் விருது வழங்கிப் பாராட்டினர். தமிழ்ப் […]

சிங்கப்பூரில் தமிழ்பள்ளிகள் (ஓர் கண்ணோட்டம்) : சிங்கையில் தமிழ் -II

1916 ஆம் ஆண்டில் சர்ஸ்டாம்போர்டு இராஃபிள்ஸ் பினாங்கிலிருந்து சுமார் 120 இந்தியர்களும் வந்தார்கள். அவர்களின் வருகைக்குப்பின் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. தமிழ்வழிக் கல்விப் பள்ளிகளே தமிழ்ப்பள்ளிகள் என அழைக்கப்பட்டன. தொடங்கப்பட்ட பள்ளி தொடரவில்லை. அதிகமாக மாணவர்கள் இல்லாததே அதற்குக் காரணமாகும். என்றாலும் இந்திய, தமிழ்த் தொழிலாளர்களின் வருகை அதிகரிக்கவே பள்ளுகளும் அதிகரிக்கத் தொடங்கின 1940களில் சுமார் 47 தமிழ்பள்ளிகள் இருந்துள்ளன. இருந்த பள்ளிகள் தொடரவும் புதிய பள்ளிகள் தொடங்காமல் போனதற்கும் பிள்ளைகளின் பற்றாக்குறையே ஆகும். தற்போது ஓரே ஒரு […]

இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள்: குறுந்தொடர்

இன்றைக்கும் வாழும் சங்கவழக்குகள் வழக்கு என்பது ஒரு சமூகத்தின் மொழி வழங்கும் முறை அல்லது சொல்லாட்சி எனலாம்.இந்த வழக்குகளை இலக்கியத்திலும் பேச்சிலும் காணலாம். பேச்சில் காணப்படுவது பேச்சு வழக்கு. சங்ககால மக்கள் எவ்விதம் பேசினார்கள் என்று அறியமுடியாது. ஆனால் அவரின் எழுத்து வழக்கை அறியப் பல நூல்கள் இருக்கின்றன. சில வழக்குச் சொற்கள் அன்றைய சூழ்நிலையில் சில குறிப்பிட்ட பொருளைத் தாங்கி நிற்கின்றன. இன்றைய வழக்கில் அச்சொற்களைக் கலைச்சொற்கள் எனலாம். சங்ககாலத்தில் இருந்த அத்தகைய சிலவழக்குகள் இன்றைக்கும் […]

தமிழர் சிற்பக்கலையின் சிறப்புகள் – I

தமிழரின் அக்கால வாழ்வியலை எதிரொளிக்கும் கருவியாக காப்பியங்களும், கோவில்களும் விளங்குகின்றன எனச் சொன்னால் அது மிகையாகாது. “கல்லிலே கலை வண்ணம் கண்டான்” என்பார்கள். தமிழரின் சிற்பக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும் அக்காலத் தமிழர்களால் எழுப்பப்பட்ட கோவில்களும், கட்டிடங்களுமே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. அண்மைக் கால விஞ்ஞான அறிவியலால் கற்பனைக் கெட்டாத பல உயரங்களை நாம் தொட்டாலும், தமிழன் அக்காலத்திலேயே செய்து முடித்தவற்றை இன்றைய தொழிற்நுட்பத்தால் செய்ய இயலாது என்பதே உண்மை. தமிழரின் சிற்பக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும் அக்காலத்தமிழர்களால் எழுப்பப்பட்ட கோவில்களும், கட்டிடங்களுமே […]

காற்றுக்கான பழந்தமிழ் பெயர்கள்

தமிழில் பொது வழக்கில் வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துவது உண்டு. எனினும் அறிவியலில் இவை வேறுவேறான பொருள் கொள்ளப்படுகின்றன தட்ப வெப்பவியலில், காற்றுக்களை அவற்றின் வலு, எத்திசையில் இருந்து வீசுகிறது ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடுவது வழக்கம். குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று வன்காற்று எனப்படும். ஏறத்தாழ ஒரு நிமிட நேரம் போன்ற இடைத்தரக்கால அளவுக்கு வீசும் பலமானகாற்று “பாய்புயல்” எனப்படுகின்றது. நீண்டநேரத்துக்கு வீசும் பலமான காற்று பல […]

சிங்கையில் தமிழ் மொழி – சிங்கப்பூரும் தமிழும் – I : புதிய குறுந்தொடர்

தமிழர்கள் நெடுங்காலமாக சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களில் பெரும்பான்மையான மக்கள் தமிழர்களே. அதுமட்டுமின்றி தமிழுக்கு அதிகாரத்துவ மதிப்பும் சிங்கப்பூரில் உண்டு.இது நமக்கு கிடைத்துள்ள மிக பெருமையான விஷயமாகும். தமிழ் வானொலியானஒலி 96.8, தமிழ் நாளிதழான தமிழ்முரசு மற்றும் தமிழ் ஒளிவழியான வசந்தம் ஆகியவை சிங்கப்பூரில் உள்ள முக்கியமான ஊடகங்களாகும். தமிழ் சிங்கப்பூரில் நிலைத்து இருப்பதற்கு இவை மிகவும் துணை நிற்கின்றன. தமிழ் கற்றல் கற்பித்தல் முறைகளும் சிங்கப்பூரில் பல பரிமாணங்களைக் கண்டு உள்ளது. அக்காலத்தில் […]

புகைப்படங்கள் : எர்னசுட்டோ

மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பயசு (எ) எர்னசுட்டோ அவர்களின் சில புகைப்படங்கள்.பாராட்டுகளும், வாழ்த்துகளும்! தொடர்புக்கு : எர்னசுட்டோபயசு புகைப்பட கலைவண்ணம்

ஏழு தமிழர் விடுதலைக்கான பேரணி: அண்மைப் புகைப்படங்கள்

சென்னையில் நடைபெறும் ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் ஒருங்கிணைத்துள்ள ஏழுதமிழர் விடுதலைக்கான பேரணி தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இதன் அண்மைப் புகைப்படங்கள்களத்திலிருந்து இதில் பல எழுத்தாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், கட்சியினர், தமிழ் அமைப்பினர் கூட்டாக கலந்துக் கொண்டுள்ளனர். தமிழ்தேசியம் நிகழ்வுகள் சென்னை வள்ளுவர் கோட்டம் தெரியும், மலேசியாவின் வள்ளுவர் கோட்டம் தெரியுமா? பத்துமலையில் முருகன் கோவில் பிரபலம். ஆனால் பத்துமலையில் வள்ளுவர் கோட்டம் எனும் குகையும் உள்ளது. இதைப் பற்றி பலருக்கு தெரியாது.உலகில் அதிக மொழிகளில் […]

உலகில் முதல் முறையாக நாட்டின் பிரதமரான ஒரு தமிழர்

தென் அமெரிக்க நாடான கயானா குடியரசில் சுமார் 8 லட்சம் மக்கள் உள்ளனர். எனினும், விரல் விட்டு எண்ணும் அளவில்தான் தமிழ்க் குடும்பங்கள் உள்ளன தமிழ் பின்புலத்துடன் தொடர்புடைய கயானா மக்களை கயானாத் தமிழர் எனலாம். இவர்கள் தங்களை தற்சமயம் கயானாத் தமிழர்கள் என்று அரிதாகவே அடையாளப்படுத்துகின்றனர். இவர்கள் மதராசி என்றோ அல்லது இந்தோ-கயனீசு என்றோஅடையாளப்படுத்துவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலேயர்களால் கயானாத் தோட்டங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்ட தொழிலாளிகளின் வழித் தோன்றிகள் ஆவார்கள். பெரும் பான்மையோருக்குத் […]

வசவ சமுத்திரம் : கிழக்கு கடற்கரைசாலையில் தமிழரின் தொன்மையான வணிக நகரம்

அகழ்வுக்குழிகள் 4.25 மீட்டர் ஆழம் வரை தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் இருந்து உறை கிணறும், அதன் அருகில் வாய்க்காலும் காணப்படுவதால், இவை நெசவுத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்ட சாயத்தொட்டிகளாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இதேபோன்ற அமைப்பில் தான் அரிக்கமேடு அகழாய்விலும் சாயத்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு உறைகிணறுகள் காணப்பட்டன. அவற்றில் ஒன்று 11 உறைகளையும், மற்றொன்று 5 உறைகளையும் கொண்டுள்ளது. இவற்றின் விட்டம், கீழே செல்லச் செல்லஅதிகரிக்கிறது. இவ்வாறு இருந்தால், இது குடிநீர்க் கிணறாகத்தான் இருக்க வேண்டும் […]