புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலருக்கு ‘பைந்தமிழ்ச் செம்மல்’ விருது
அன்று மணலூர்ப்பேட்டையில் தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம், மணலூர்ப்பேட்டை தமிழ்ச்சங்கம், நிலாமுற்றம் மாத இதழ் இணைந்து நடத்திய வானவில் விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் சிறந்த முறையில் தமிழ்த் தொண்டாற்றி வருவதைப் பாராட்டி பைந்தமிழ்ச் செம்மல் விருது அவருக்கு வழங்கப்பட்டது.பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.தாமோதரன், சின்னத்திரை நடிகர் கவிஞர். கலைமாமணி அமரசிகாமணி, புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து, தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கநிறுவனத் தலைவர் சுடர். முருகையா ஆகியோர் விருது வழங்கிப் பாராட்டினர். தமிழ்ப் […]