வரலாற்றுக் காலம் – 1. கொடுமணலும் மரக்காணமும்

தமிழக அகழாய்வுகள் காட்டும் வரலாற்றுக் கால மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை பெருங் கற்படைக் காலத்தின் இறுதிக்காலமும், சங்க காலத்தின் ஆரம்பமும், தமிழக வரலாற்றின் துவக்க காலம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இக்காலத்தில்தான், கீறல் குறியீடுகளின் தொடர்ச்சியாக, எழுத்துகள் பயன்பாட்டில் வந்தன. எழுத்துகளும் குறியீடுகளும் கலந்து வழக்கில் இருந்தன. மட்கலன்களிலும் சமணப்படுக்கைகளிலும் ஒரு சொல், சில சொற்கள், ஒரு வரி, சில வரி என தமிழ் பிராமி எழுத்துகள் தமிழகத்தில் வளர்ச்சி பெற்றன. […]