14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு பேரிகையில் கண்டுபிடிப்பு!

சென்னை, பாகலுார் அருகேயுள்ள பேரிகையில், ஒய்சாளர்களின் கடைசி அரசனான வீர வல்லாளன், நிலம் தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து, பாகலுார் செல்லும் வழியில், 15வது கி.மீ., யில் உள்ளது பேரிகை கிராமம். இங்குள்ள ஏரியில், அறம் வரலாற்று ஆய்வு மையத்தினர் நடத்திய கள ஆய்வில், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பேரிகை ஏரியின் கிழக்கு கரைப் பகுதியில், நான்கு அடி உயரம், […]

கையூட்டு வாங்கினாலும், கொடுத்தாலும் மரணதண்டனை விதித்த அரசன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல்

தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சிகாலத்தில் கையூட்டு (லஞ்சம்) கொடுத்தாலும், வாங்கினாலும் மற்றும்அதைத் தடுக்கத் தவறியஅரசு அதிகாரிக்கும் மரணதண்டனை வழங்க மன்னன் ஆணை பிறப்பித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது பென்னேசுவரமடம் கிராமம். இங்குள்ள பென்னேசுவரர் கோயில் மிகவும் பழமையானது, பெயர் பெற்றது. இந்தக்கோயில் கல்வெட்டில் இலஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மற்றும் அதை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கும் மரணதண்டணை விதிக்கும் வகையில் மன்னன் ஆணையிட்ட கல்வெட்டு உள்ளது. இதுகுறித்து கிருட்டிணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த […]